India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை, அரசு கல்லூரியில் 2 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற்று முடிந்த நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இன்று முதல் திறக்கப்படுகிறது. மேலும் அனைத்து வகுப்புகளும் நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் கணேசன் தெரிவித்தார்.
தி.மலை மாவட்டம், கடந்த ஏப்ரல் மாதம் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 10,11ஆம் மாணவர்களுக்கு, துணைத்தேர்வு பல்வேறு மையங்களில் நேற்று முதல் தொடங்கியது. இதில் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 645 பேரும், 11 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் 285 பேரும் நேற்று தேர்வு எழுத வரவில்லை. மேலும் தவறிய மாணவர்கள் தவறாமல் தேர்வு எழுதவேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேச மூர்த்தி கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறையால் நடத்தப்படும் இசைக்கல்லூரி திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் குரலிசை, நாதஸ்வரம், தேவாரம், பரதநாட்டியம், மிருதங்கம் ஆகிய பிரிவுகளில் மாதந்தோறும் ரூ.400 உதவித் தொகையுடன் 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் படிக்க விருப்பமுள்ளவர்கள் கல்லூரி முதல்வரை நேரில் அணுகலாம் என்று ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை தினம் 2024 கடைப்பிடித்தல் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சிறு வயது திருமணங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அழகுசேனை கிராமத்தில் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெரு விளக்கு எரியவில்லை என பல முறை புகார் அளித்தும் ஊராட்சித் தலைவர் ஏழுமலை நடவடிக்கை எடுக்காததால் மக்கள் மின்கம்பங்களில் தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மலை முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “முதல்வரின் திறனாய்வு தேர்வு ஜுலை.21 அன்று நடைபெறுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்களுக்கு மாதம் ரூ.1000 இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும். விருப்பம் உள்ள மாணவர்கள் https://<
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் கோவிலில் ஆனி பிரமோற்சவ விழா வரும் 7 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இதில் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்யுமாறும் தெரிவிக்கபட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினைக் கலைஞா்களுக்கான கடன், கல்விக் கடன் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மை சமூகத்தினா் தங்களுக்குத் தேவையான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
திருவண்ணாமலை, அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) இன்று முதல் ஜூலை 15ஆம் தேதிவரை பல்வேறு பிரிவுகளில் உள்ள 178 காலியிடங்களை நிரப்ப நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, ஜாதிச்சான்று, ஆதார் நகல், 5 பாஸ்போர்ட் புகைப்படம், வங்கி கணக்கு நகல், ஆகியவற்றுடன் சேர்க்கைக்கு நேரில் வரவேண்டுமென முதல்வர் பொன்.தனசேகரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, அரசு தொழிற்பயிற்சி மையம் (ITI) ஜூலை 1 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதிவரை பல்வேறு பிரிவுகளில் உள்ள 178 காலியிடங்களை நிரப்ப நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்று, மாற்றுச் சான்று, ஜாதிச்சான்று, ஆதார் நகல், 5 பாஸ்போர்ட் புகைப்படம், வங்கி கணக்கு நகல், ஆகியவற்றுடன் சேர்க்கைக்கு நேரில் வரவேண்டுமென முதல்வர் பொன்.தனசேகரன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.