Tiruvannamalai

News July 10, 2024

தி.மலை: மடாலயத்திற்கு கவர்னர் வருகை

image

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே திருமலை பகுதியில் அமைந்துள்ள ஜெயினர் மடாலயத்தில் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து பிராகரிதம் மொழி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு டெல்லி மத்திய யுனிவர்சிட்டி சான்று வழங்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைபுரிந்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் கவர்னருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

News July 10, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிவாரண முகாம், பேரிடரால் உயிரிழப்பு, கால்நடை இறப்பு, வீடு சேதம், தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்பு, ஏரிக்கரை உடைப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்படாமல் இருக்க இன்றுமுதல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

News July 10, 2024

பயிர் காப்பீடு செய்ய தேதி அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு 2024-25ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள்ளது . ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு பிரீமியம் தொகை ரூ.590-ஐ ஜூலை 15-க்குள் செலுத்த வேண்டும். மணிலா ரூ.590, சாமை ரூ.190, மக்காச்சோளம் ரூ.436, கம்பு ரூ.272 ஆகியவற்றுக்கான பிரீமியம் தொகை செலுத்த ஜூலை 31ஆம் தேதி கடைசி நாள் என்று ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

வண்டல் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விருப்பமுள்ள விவசாயிகள் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.கர பாண்டியன் தெரிவித்துள்ளார். https:/www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள தங்கள் வட்டத்திற்குட்பட்ட ஏரி, குளங்களிலிருந்து இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

News July 10, 2024

தி.மலை ஆட்சியர் அறிவிப்பு

image

தி.மலை மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு கிராமபுற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வருமானத்தை பெருக்கவும், 50 சதவீதம் மானியத்தில் புறக்கடை நாட்டின கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்த 1 பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் 4 வார கோழி குஞ்சுகள் வழங்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மக்களுடன் முதல்வர் முகாம்களில் மனு அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 10, 2024

ஆளுநர் தி.மலை வருகை: பலத்த பாதுகாப்பு

image

போளூர், திருமலை கிராமம், அருகந்தகிரி சமண மடத்தில் 20 நாட்களாக பிராகிருதம் பயிற்சி பெற்ற 60 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கவும், ஆச்சரிய அகலகங்க கல்வி அறக்கட்டளை சார்பில் 250 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை வழங்கவும் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று வருகைதர இருக்கிறார். ஆளுநரின் வருகையையொட்டி எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

News July 9, 2024

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை

image

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ஆம் வகுப்பு முதல் பட்ட வகுப்பு வரை படித்து பதிவு செய்து ஐந்தாண்டு காத்திருப்பில் உள்ள 45 வயது உட்பட்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது. இதற்கு ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் www.tnvelaivaaippu.gov.in இணையதளத்திலும் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

தி.மலை: தமிழ் செம்மல் விருதிற்கு விண்ணப்பிக்கலாம்

image

தி.மலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டு தொண்டு செய்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ் செம்மல் விருது, ரூ.25000 பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு தமிழ் செம்மல் விருதிற்கு ஆகஸ்ட் 9 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்ப படிவத்தினை www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம் என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

News July 9, 2024

போலி மருத்துவர்கள் குறித்து விழிப்புணர்வு தேவை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலி மருத்துவர்கள் 10க்கும் மேற்பட்டோர் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிராமங்கள் நிறைந்த நம்ம மாவட்டத்தில் அரசு சார்பில் பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ, சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே போலி மருத்துவர்கள் குறித்த விழிப்புடன் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும். என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

News July 9, 2024

அனுமதியற்ற விளம்பர பதாகைகள்- ஆட்சியர் எச்சரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதி பெறாமல் வைக்கப்படும் விளம்பரப் பாதாகைகளின் நிறுவனா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா். விளம்பரப் பதாகைகள் வைப்பதற்கான அனுமதியைப் பெற 15 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி இல்லாத பதாகைகளின் நிறுவனா் மீது ஓராண்டு சிறை, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான அபராதம் விதிக்கப்படும் என்றாா்.

error: Content is protected !!