India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலையார் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா வரும் 29ஆம் தேதி காலை 6 மணி முதல் 7.15 மணிக்குள் உண்ணாமுலை அம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றும் விழா நடைபெறும். அப்போது பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இந்த விழா ஆகஸ்ட் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்று அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 569 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. மனுவின் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
செங்கம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் முதல் மேல் செங்கம் வரை கடந்த சில மாதங்களாக தொடர் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல் தலைவர் மல்லிகா நேரில் ஆய்வு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
செங்கம்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பக்கிரிபாளையம் முதல் மேல் செங்கம் வரை கடந்த சில மாதங்களாக தொடர் சாலை விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல் தலைவர் மல்லிகா நேரில் ஆய்வு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் தேன்மொழி வேல் அவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.
போளூரில் வாரம் தோறும் திங்கள் கிழமையில் ஆடு சந்தை நடைபெறுது வழக்கம். இந்நிலையில் ஆடி மாதத்தை முன்னிட்டு போளூர் ஆடு சந்தையில் இன்று பல்லாயிரக்கணக்கான ஆடுகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக போளூர், சந்தவாசல், ஆரணி படவேடு குப்பம், கலசப்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
தி.மலை, பௌர்ணமியை முன்னிட்டு நேற்று கிரிவலம் சென்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஈசானிய மயானம் அருகே சென்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பக்தர்கள் அவரை சாலையோரம் அமரவைத்து தண்ணீர் கொடுத்தனர். திடீரென மயங்கி கீழே விழுந்தார். 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். போலீசார் வழக்கு பதிந்து இறந்த நபரின் விவரங்களை விசாரிக்கின்றனர்.
தி.மலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் ஜமுனாமரத்தூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் (ஐடிஐ) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர உதவித்தொகை, விலையில்லா பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, காலணி வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் உரிய கல்விச் சான்றுகளுடன் சேர்க்கைக்கு முதல்வரை தொடர்புகொள்ளலாம்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆடி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். சாமியை தரிசனம் செய்வதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் சரியான முறையில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்களா என்று எஸ் பி கார்த்திகேயன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசானது முதல் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆட்டோக்களை பறிமுதல் செய்ய ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆட்டோக்களுக்கு தலா ரூ.20,000 அபராதம் விதித்தும், பக்தர்களின் புகார் குறித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைத்தும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.