Tiruvannamalai

News August 7, 2024

திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 7 முதல் 11 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

News August 7, 2024

பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம்

image

 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் திருப்பத்தூர் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்(பொறுப்பு ) தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை கூறினார்.மேலு‌ம் குறைகள் குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

News August 7, 2024

திருவண்ணாமலை அருகே நாளை மின்தடை 

image

ஆரணி அடுத்த தச்சூர் 110/33 kv துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக நாளை  காலை 9 மணி முதல் 2.00 மணி வரை தச்சூர், அரையாளம்,விண்ணமங்கலம், கோனையூர் , நடுப்பட்டு,தெள்ளூர், ரந்தம் , ஆகாரம், மேல் சீசமங்கலம்,நாராயணாமங்கலம், திருமணி மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கு மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார் .

News August 6, 2024

திருவண்ணாமலையில் கேரம் போட்டி

image

அடி அண்ணாமலை அரசு உயர்நிலைப் பள்ளியில் (ஆகஸ்ட் 8) திருவண்ணாமலை வட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் 14, 17, 19 ஆகிய வயது பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம். போட்டிகள் காலை 9:30 மணியளவில் துவங்கப்படும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

News August 6, 2024

தி.மலை மாணவி கண்டெடுத்த கற்கால கருவிகள்

image

தண்டராம்பட்டு அடுத்த அரசு உயர்நிலைப் பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவி சவுந்தர்யா நிலத்தில் விவசாயப் பணி மேற்கொண்டபோது, கற்காலத்தைச் சேர்ந்த இரண்டு கைக்கோடரிகளை கண்டெடுத்துள்ளார். இது 8,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என தொன்மை பாதுகாப்பு மன்ற பொறுப்பாளரும் ஆசிரியருமான ரேவதி தெரிவித்துள்ளார்.

News August 6, 2024

தி.மலை ஆயுதப்படைக்கு புதிய ஆய்வாளர் பொறுப்பேற்பு

image

வேலூர் காவல் சரகத்தில் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த 45 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி சரோஜ் குமார் தாகூர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை ஆய்வாளராக சண்முகம் இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 6, 2024

ஆரணி சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் மழை

image

ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சேவூர், இரும்பேடு,பையூர், வடுக சாத்து மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களிலும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு 7.00 மணி முதல் மழை கன மழை பெய்ய தொடங்கியது. பின்பு இரவு முழுவதும் தொடர்ந்த மழை இன்று அதிகாலை 5.30 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News August 6, 2024

தி.மலை 32 குளங்கள் ஆக்கிரமிப்பு வழக்கு

image

திருவண்ணாமலை நகரில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்,வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, அறநிலையத் துறை ஆகியோர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மூன்று வாரங்கள் அவகாசம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால், உயர் நீதிமன்றமே குழு அமைத்து நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட நேரிடும் என எச்சரித்துள்ளது.

News August 6, 2024

கீழ்பென்னாத்தூரில் நெல் விதை பண்ணை ஆய்வு

image

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக விதைப் பெருக்குத் திட்டத்தின் கீழ், நெல் விதை பண்ணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அரசு செயலரும், தி.மலை மாவட்ட கண்காணிப்பாளருமான எஸ்.மதுமதி ஆகியோர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். 

News August 5, 2024

4 பேரிடம் 16 லட்சம் ரூபாய் மோசடி

image

திருவண்ணாமலை மாவட்டம் தச்சம்பட்டு அருகே அள்ளிகொண்டாடபட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வியாகுலமேரி, அண்ணம்மாள், லூர்து மேரி, வெண்சிலாஸ். இவர்களிடம 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அதே பகுதியை சேர்ந்த புஷ்பலதா ராமு என்பவர் மீது நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் இன்று மனு அளித்துள்ளனர்.

error: Content is protected !!