Tiruvannamalai

News August 14, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (14-08-2024) 28 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 14, 2024

தி.மலையில் புகைப்பட கண்காட்சி

image

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இந்திய அரசின் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக இந்திய தேசப் பிரிவினை கொடூரங்களின் நினைவு தின புகைப்பட கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ரயில் நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News August 14, 2024

ஆரணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை

image

ஆரணி அடுத்த நெசல் கூட்டுசாலையில் விழுந்த மரத்தில் மோதி சிவா என்பவர் திங்கள் அன்று உயிரிழந்தார். விபத்திற்கு அதிகாரிகளே காரணம் என கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் ஆணைக்கிணங்க, ஆரணி உதவிக் கோட்டப் பொறியாளர் சந்திரசேகர் பணியிட மாற்றம், இளநிலைப் பொறியாளர் செந்தில்குமார், சாலை ஆய்வாளர் பாஸ்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 14, 2024

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி

image

திருவண்ணாமலை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தை 7401703484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்

News August 13, 2024

ஆரணி அருகே லாரிகளை சிறைபிடித்த மக்கள்

image

ஆரணி அருகே முள்ளண்டிரம் கல்குவாரியில் இருந்து கற்களை அதிக பாரத்துடன் ஏற்றி வரும் கனரக வாகன லாரிகளால் கண்ணமங்கலம் அருகே பட்டாங்குளம் பகுதியில் உள்ள தார் சாலைகள் சேதம் அடைவதுடன், அப்பகுதியில் செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் பைப்புகள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்றுள்ளன. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் கல் குவாரியில் இருந்த வந்த லாரியை மடக்கி சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

News August 13, 2024

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

image

செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுக்கா கனிகிலுப்பை கிராமத்தில் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி காவ்யா ஸ்ரீ உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக இன்று திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஒவ்வொரு கடைக்கு சென்று குளிர்பானங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News August 13, 2024

1 லட்சம் நிதி உதவி வழங்கிய எம்பி

image

சேத்துப்பட்டு அடுத்த விண்ணமங்கலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் ஆலோசனைப்படி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News August 13, 2024

தி.மலையில் ஆக.15ல் கனமழைக்கு வாய்ப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2024

தி.மலையில் மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

தி.மலையில் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுபானக்கடைகள்(TASMAC), முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் விற்பனையினை DRY DAY ஆக அனுசரித்து மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

News August 13, 2024

தி.மலையில் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்து கூட்டம்

image

தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாவட்ட அளவிலான வாதுரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை நீதிபதி மதுசுதனன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவானுபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அதனை காக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.

error: Content is protected !!