India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆரணி அருகே முள்ளண்டிரம் கல்குவாரியில் இருந்து கற்களை அதிக பாரத்துடன் ஏற்றி வரும் கனரக வாகன லாரிகளால் கண்ணமங்கலம் அருகே பட்டாங்குளம் பகுதியில் உள்ள தார் சாலைகள் சேதம் அடைவதுடன், அப்பகுதியில் செல்லும் ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் பைப்புகள் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சென்றுள்ளன. இந்த நிலையில், அப்பகுதி மக்கள் கல் குவாரியில் இருந்த வந்த லாரியை மடக்கி சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
செய்யாறு அருகே உள்ள வெம்பாக்கம் தாலுக்கா கனிகிலுப்பை கிராமத்தில் குளிர்பானம் குடித்து 6 வயது சிறுமி காவ்யா ஸ்ரீ உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக இன்று திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஒவ்வொரு கடைக்கு சென்று குளிர்பானங்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு அடுத்த விண்ணமங்கலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் ஆலோசனைப்படி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M.S தரணிவேந்தன் 1 லட்சம் நிதி உதவி வழங்கினார். அப்போது கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக திருவண்ணாமலையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மலையில் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு சில்லறை மதுபானக்கடைகள்(TASMAC), முன்னாள் இராணுவ வீரர்களுக்கான அங்காடி, அரசு மற்றும் தனியார் மதுபான கூடங்கள் விற்பனையினை DRY DAY ஆக அனுசரித்து மூடப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
தி.மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று மாவட்ட அளவிலான வாதுரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதன்மை நீதிபதி மதுசுதனன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவானுபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அதனை காக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.
ஆரணி அடுத்த பையூரைச் சேர்ந்த ராகுல் 26, ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்துவதாக நேற்று ஆரணி கிராமிய காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வேலூரில் இருந்து ஆரணி வந்த பேருந்தை சேவூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நிறுத்தி சோதனை செய்தனர். இதில் ஒரு லட்சம் மதிப்பிலான 4 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த ராகுலை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை உலக சுற்றுலா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் பல்வேறு சுற்றுலாத் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகளை வழங்க உள்ளது. ஆகவே தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தொழில்முனைவோரும் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு www.tntourismawards.com என்ற இணையதளத்தில் ஆக 20க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெ. பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் முதியோர் உதவித் தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 573 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தி.மலை மாவட்டத்தில் வரும் 15.08.2024 ‘சுதந்திர தினம்’ அன்று 860 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. அனைத்து பொதுமக்களும் இக்கிராமசபை கூட்டங்களில் பங்குபெற்று கூட்டத்தில் வைக்கப்படும் பொருட்கள் குறித்து விவாதிக்கலாம் எனவும் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து பொது மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.