India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, சாத்தனூர், குப்பனத்தம் அணைகள் உள்பட 4 அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. சாத்தனூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 119 அடியாகவும். குப்பநத்தம் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 59.04 அடியாகவும். மிருகண்டா நதி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 22.97 அடியாகவும். செண்பகத்தோப்பு அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 62.32 அடியாகவும் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆம் வகுப்பு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு, முதுநிலைப் பட்டப்படிப்பு, பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் தேர்ச்சி பெற்ற வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாம் காலை 10 மணி முதல் 2 மணி வரை நடைபெறுகிறது.
செய்யாறு அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் 2005ஆம் ஆண்டு அரசு பேருந்தில் சென்ற போது பேருந்து விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி லதா இழப்பீடு கோரி தொடர்ந்த வழக்கில் 2010ஆம் ஆண்டு குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த இழப்பீட்டுத் தொகை வழங்காதால் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நீதிமன்ற ஊழியர்கள் நேற்று பேருந்தை ஜப்தி செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி 1 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்த்து) அல்பெண்டசோல் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இந்த முகாம்களில், மொத்தம் 10.20 லட்சம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளி கல்லூரி பேருந்துகளில் மாணவர்களுடன் விபத்துகளை ஏற்படுத்தினால் ஓட்டுநர்களின் உரிமம் அடியோடு ரத்து செய்வதோடு சிறை தண்டனை அனுபவிக்கப்படும். சிக்கும் தனியார் பள்ளிகளின் நிறுவனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணியில் நடைபெற்ற தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவக்குமார் எச்சரிக்கை விடுத்து பேசினார்.
செங்கம் அடுத்த கோட்டங்கள் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (ம) ஆனைமங்கலம் சேர்ந்த சத்யா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்துள்ளனர். தங்கள் குடும்பத்தாருக்கு தெரிய வந்த பின்னர் காவல் நிலையத்தில் இருவரும் பிரிந்துள்ளனர். தற்போது ராஜேஷ் குடும்பத்தார் திருமணம் செய்ய முற்பட்டபோது சத்யா காரில் ராஜேஷை கடத்தி கொலை செய்ய முற்பட்டுள்ளார். செங்கம் போலீசார் ஒருவரை கைது செய்து 7 பேரை தேடி வருகின்றனர்.
தி.மலை மாவட்ட கேரம் சங்கம் மற்றும் எஸ் முருகையன் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கேரம் போட்டி வருகின்ற (25-08-2024) முருகையன் கேரம் அகாடமியில் நடைபெற உள்ளது என்பதை தி.மலை மாவட்ட கேரம் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார் 12,14,18,21 ஆகிய வயது வாரியாக போட்டிகள் நடைபெற உள்ளது. மேலும் தகவலுக்கு ராஜா +91 93457 97313
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் மேல்சிலம்படி அடுத்த வண்ணான் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்.இவருக்கு 2 குழந்தைகள் சுபாஷினி மற்றும் சூர்யா. நேற்று இருவரும் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த பண்ணை குட்டையில் தேங்கி இருந்த மழை நீரில் விளையாடுவதறகாக இறங்கியதில் இருவரும் நீரில் மூழ்கி பலியானார்கள். ஜமுனாமரத்தூர் போலீசார் இறந்த சிறுவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர் .
விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,ஆக.24, 25 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு), ஆக.26 கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை வருவதால் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆக. 25,26 தேதிகளில் திருவண்ணாமலைக்கு 60 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கீழ்பென்னாத்தூர் வட்டத்தைச் சேர்ந்த ராஜன்தாங்கல் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 முதல் மாலை 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். ராஜன்தாங்கல், ஆனானந்தல் , கொளத்தூர், மதுராம்பட்டு , சாணிப்பூண்டி , நாடழகானந்தல், கீழ்க்கரிப்பூர் , கெங்கம்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தகவல் தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.