India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு இன்று (ஏப்ரல் 12) முதல் 11/05/2025 வரை ஆன்லைன் வழியாக இந்த <
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் 4-வது தெருவை சேர்ந்தவர் முனவர் பாஷா. இவரது இளைய மகன் முகம்மது அப்ரார் (14), நேற்று முன்தினம் பகலில் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை முனவர் பாஷா கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த முகமது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு அருகே வீடு அடமான கடன் தர மறுத்ததால் தனியார் வங்கி ஊழியர் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கீழாத்தூர் கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், அடமான கடன் பெற வந்தார். இவர் பல வங்கிகளில் பணத்தை வாங்கி சரியாக கட்டவில்லை என்பதை அறிந்த வங்கி ஊழியர் தனுஷ் கடன் வாங்கி தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணமூர்த்தை தனுஷை தனியே வரவைத்து கத்தியால் வெட்டினார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று திருவண்ணாமலை குமரகோவில் தெருவை சேர்ந்த சண்முகா உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் சா.குமார் குடும்பத்தின் சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பிலான 750 கிராம் பச்சைக்கல், வைரக்கல் போன்றவை பதிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
▶மாவட்ட ஆட்சியர் – 04175233333 ▶மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) – 04175-233026 ▶மாவட்ட வருவாய் அலுவலர் – 9445000905 ▶இணை வேளாண் இயக்குனர் – 9842692807 ▶திருவண்ணாமலை கோட்ட ஆட்சியர் – 04175252432 ▶சுகாதார துணை இயக்குனர் – 04175-232474 ▶பேரிடர் மேலாண்மை – 9442254997 ▶மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் – 9443228879 ▶மாவட்ட கல்வி அலுவலகம் – 8012599388 ▶மாவட்ட பதிவாளர் அலுவலகம் – 8300820153
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே பழவேரி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (39), குழந்தையின்மை காரணமாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆழ்ந்த யோசனையில் பொதுக் கிணற்றின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்திருந்த போது தவறி விழுந்து, நீரில் மூழ்கி நேற்று (ஏப்.10) உயிரிழந்தார். தகவல் அறிந்த தெள்ளார் போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரும் ஏப்ரல் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை, தி.மலை மண்டல உதவி ஆணையர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நடத்தபட உள்ளன. பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்றவற்றை செய்து கொள்ளலாம். இலவசமாகவே ரேஷன் கார்டில் அப்டேட் செய்துகொள்ளலாம். இந்த அறிவிப்பால் ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஷேர் பண்ணுங்க
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.
திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. திங்கள் முதல் வெள்ளி வரை வார நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வகுப்புகள் நடத்தப்படும்.விருப்பம் உடையவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.