Tiruvannamalai

News August 11, 2025

தி.மலை: பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (11.08.2025) பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

News August 11, 2025

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் முகாம் நடைபெறும், இன்று (ஆக.11) நடந்த கூட்டத்தில் செய்யாறில் நேரடி கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என இந்தாண்டு ஜூலை 31ல் உறுதியளித்தும் இன்று வரை திறக்கப்படவில்லை, திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் மனு அளித்தனர்

News August 11, 2025

திருவண்ணாமலை : நாளை கல்லூரி விடுமுறை!

image

தி.மலை அரசு கலைக் கல்லூரியில் நாளை (ஆக.12) முதுகலை மற்றும் முதுஅறிவியல் பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு சேர்க்கை மாணாக்கர் கலந்தாய்வு நடைபெற உள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் UG & PG (முதல் மற்றும் இரண்டாம் சுழற்சி) வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சுழற்சி ஆசிரியப் பணியாளர்களுக்கும் வேலை நேரம் காலை 09.00 முதல். மாலை 04.00 மணி வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

மாமியரின் கழுத்தை நெறித்து கொன்ற மருமகள்

image

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் அய்யம்மாள்(79) என்பவரை குடும்பத்தகராறில் மருமகளே கழுத்தை நெறித்து கொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது. மாமியாரை கொன்ற மருமகள் தேவி(35) காவல் நிலையத்தில் சரணடைந்தார். தேவி சரணடைந்ததையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News August 11, 2025

தி.மலை: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

image

தி.மலை மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <>E-பெட்டகம் <<>>என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்தால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். பயனுள்ள தகவலை நண்பர்களுக்கு உடனே ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

தி.மலை: பரோடா வங்கியில் வேலை; பட்டதாரிகளுக்கு ஜாக்பாட்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள 417 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு 24- 42 வயது உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.48,480 -ரூ.93,960 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கேற்ப கல்வி தகுதி வரைமுறை செய்யப்பட்டுள்ளது. விவரங்களுக்கு (ம) விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் <<>>செய்யுங்கள். பட்டதாரிகளுக்கு இது ஜாக்பாட் அறிவிப்பு. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.

News August 11, 2025

திருவண்ணாமலையில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம்

image

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம், இன்று (ஆக.11) திங்கள் கிழமை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் 8,10,12ம் வகுப்பு பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் நேரடியாக தொழிற்சாலைகளில் தொழிற்பயிற்சியில் சேர்ந்து 3 மாதம் முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சி பெறலாம். கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.apprenticeshipindia.govin பதிவு செய்து வரவும்.

News August 11, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 10, 2025

ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு :

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (ஆக. 10) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

News August 10, 2025

திருவண்ணாமலை மக்களே கனமழை எச்சரிக்கை – உஷார்!!

image

திருவண்ணாமலை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் இன்று (ஆக.10) இரவு வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை வர வாய்ப்புள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம். உணவு, மெழுகுவர்த்தி, விளக்கு போன்ற அத்தியாவசிய பொருட்களை எளிதாய் எடுக்கும் வண்ணம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க சொல்லுங்க.

error: Content is protected !!