Tiruvannamalai

News August 12, 2025

தி.மலை மக்களே…கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

image

தி.மலை மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

திருவண்ணாமலை 3 அரசு பள்ளிக்கு பூட்டு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 அரசு பள்ளிகள் தற்போது மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 207அரசு பள்ளிகளில் ஒரு மாணவ மாணவிகள் கூட (பூஜ்ஜியம்) பள்ளியில் சேர்வதற்கு முன் வராத நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அந்த 207பள்ளிகளை முற்றிலுமாக மூடுவதாக தமிழக அரசு முடிவு எடுத்து உள்ளது. அதற்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

News August 12, 2025

தி.மலை: 8வது போதும் கைநிறைய சம்பளத்தில் அரசு வேலை!

image

தி.மலை மக்களே, தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககத்தில், அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்படவுள்ளது. ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பிக்கும் முறை மற்றும் விவரங்களை அறிய 044-29520509 எண்ணுக்கு அலுவலக நேரங்களில் அழைக்கலாம். கடைசி தேதி 16.08.2025 ஆகும். SHARE IT

News August 12, 2025

தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (ஆக.12) செங்கம், கலசப்பாக்கம், வந்தவாசி, தெள்ளார், ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் விவரங்களை மேலே உள்ள படத்தை காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 12, 2025

கூட்டுறவு வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி

image

திருவண்ணாமலை காந்திநகர் மத்திய கூட்டுறவு வங்கி கிளை மேலாளர் விஜயலட்சுமி, நகை மதிப்பீட்டாளர் கோபிநாதன் மற்றும் பணியாளர் ஏழுமலை உள்ளிட்டோர் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூபாய் 3 கோடி மோசடி செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து மூவரையும் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

News August 12, 2025

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் பாய்ச்சல் விபிஆர்சி கட்டடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் எஸ்.கே மஹால், வந்தவாசி வட்டாரத்தில் அம்மையப்பட்டி பி.எஸ்.ஜி. மஹால், தெள்ளார் வட்டாரத்தில் கொடியாளம், விபிஆர்சி கட்டடம், ஆரணி வட்டாரத்தில் எஸ்கேவி பாக்கியலட்சுமி மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் சுருட்டை சமுதாகக் கூடம் ஆகிய இடங்களில் இன்று (ஆக.12) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. ஷேர் பண்ணுங்க

News August 12, 2025

பேருந்து கதவு மூடிய நிலையில் : தொங்கியபடி பயணித்த பயணிகள்

image

திருவண்ணாமலயில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் நீண்ட நேரமாக காத்திருந்து பேருந்து வராததால் ஆத்திரமடைந்தனர். சில பேருந்துகள் கதவை மூடியவாறு பேருந்து நிலையத்திற்கு உள்ளே வருவதை கண்ட பயணிகள் நடத்துனரிடம் வாக்குவாதம் செய்து கதவை திறக்க சொல்லியும் மூடியவாறு சென்ற பேருந்து. பேருந்தில் கதவு மூடி இருந்த நிலையில் ஆபத்தை உணராமல் தொங்கிச் சென்ற பயணிகள்.

News August 11, 2025

தி.மலை மாவட்ட இரவு ரோந்து காவல் பணி விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (11.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம். அவசரத்திற்கு நேரடியாக காவல் அதிகாரி தனி செல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இரவு கனமழை பெய்ய உள்ளதால் இரவு பயணத்தை தவிர்க்க வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. காடு மலைப்பகுதிகளில் பாதுகாப்புடன் தே

News August 11, 2025

தி.மலை: பொதுமக்கள் குறைத்தீர்வு நாள் கூட்டம்

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் க. தர்ப்பகராஜ் இன்று (11.08.2025) பெற்றுக் கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

News August 11, 2025

தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக கோரிக்கை

image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் முகாம் நடைபெறும், இன்று (ஆக.11) நடந்த கூட்டத்தில் செய்யாறில் நேரடி கொள்முதல் நிலையம் விரைவில் அமைக்கப்படும் என இந்தாண்டு ஜூலை 31ல் உறுதியளித்தும் இன்று வரை திறக்கப்படவில்லை, திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சி சார்பற்ற விவசாயிகள் மனு அளித்தனர்

error: Content is protected !!