Tiruvannamalai

News October 5, 2024

திருவண்ணாமலையில் மது குடித்த தொழிலாளி மரணம்

image

திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை அருகே உள்ள நேற்று டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்த ஆறுமுகம் என்கிற கூலி தொழிலாளி திடீரென்று வலிப்பு வந்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் இருந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்கள். இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் விசாரணை.

News October 5, 2024

தி.மலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டில் அக்.15 ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல் ழேடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மக்களே வெளியே செல்லும் முன் கவனமாக இருங்கள். குடை எடுத்துச் செல்லுங்கள்.

News October 5, 2024

அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம்

image

திருவண்ணாமலையில் தனிநபர்கள் வீட்டில் சிறந்த நூலகம் அமைத்தவர்கள் அக்.10ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார். பராமரிக்கப்படும் நூலகம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3,000 மதிப்பிலான கேடயம், சான்றிதழ் வழங்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, வகைகள் உள்ளிட்ட விவரங்கள் சேர்க்க வேண்டும். தகவலுக்கு 9976265133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News October 4, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (04.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 4, 2024

பள்ளி மேலாண்மை குழு அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

image

தண்டராம்பட்டு வட்டம் தென்முடியனூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு அமைத்திட வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தண்டராம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News October 4, 2024

டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி

image

டிஎன்பிஎஸ்சி குரூப் முதன்மை தேர்வுக்கு அக்.7ஆம் தேதி முதல் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
அக்.7ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் சனிக்கிழமை வரை
காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 4, 2024

வீடுகளில் நூலகம் அமைத்துள்ள நபா்கள்

image

தி.மலையில், தனிநபர்கள் வீட்டில் சிறந்த நூலகம் அமைத்தவர்கள் அக்.10-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம். பராமரிக்கப்படும் நூலகம் தேர்வு செய்யப்பட்டு ரூ.3,000 மதிப்பிலான கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நூல்களின் எண்ணிக்கை, வகைகள் உள்ளிட்ட விவரங்கள் சேர்க்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9976265133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News October 4, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்

image

தி.மலையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டார். இந்த முகாமில் 257 அடையாள அட்டை மனுக்கள் பெறப்பட்டு, 154 பேருக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. 15 பேருக்கு பேருந்து பயண அட்டைகள், 10 பேருக்கு ரயில் பயணச் சலுகை, மற்றும் 3 பேருக்கு முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், 5 வங்கிக் கடன் மனுக்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

News October 4, 2024

தி.மலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

லட்சத்தீவு அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 4, 2024

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஆர்.டி.ஓ. அலுவலகம், செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். ஒரந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த கதிர்வேல் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!