Tiruvannamalai

News April 16, 2025

பள்ளியில் கேமரா, கணினி பாகங்கள் திருட்டு

image

செங்கம் அருகே காயம்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி 3 நாட்கள் விடுமுறைக்குப் பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது பள்ளியின் ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் உள்ளே புகுந்து, கண்காணிப்புக் கேமரா மற்றும் கணினி உதிரி பாகங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் ரகுபதி புகார் அளித்ததையடுத்து, செங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்வி பயிலும் இடத்திலும் கைவரிசையா? 

News April 16, 2025

இளம்பெண்ணை ஏமாற்றியவர் கைது

image

காஞ்சிபுரம், உத்திரமேரூரை சேர்ந்த பாலாஜி என்பவர், ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் செய்யாறைச் சேர்ந்த பெண் பணிபுரிந்த நிலையில், இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பாலாஜிக்கு ஏற்கனவே திருமணமானதை அறிந்த அந்த பெண் காதலை கைவிட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணுக்கு நடக்கவிருந்த திருமணத்தை பாலாஜி நிறுத்திய நிலையில், பெண் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.

News April 15, 2025

தி.மலை இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.04.2025) ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளின் எண்கள் மேல் உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. 

News April 15, 2025

திருவண்ணாமலை: பல்வேறு நோய்கள் தீர்க்கும் கோவில்

image

திருவண்ணாமலை, படவேடு கிராமத்தில் ரேணுகாம்பாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மன் கோவிலில் வேப்பிலை தண்ணீர் தீர்த்தமாக வழங்கப்படுகிறது. இதை வாங்கி உடலில் தெளித்தால் 3-5 நாட்களில் அம்மை நோய் விலகிவிடும். மேலும், திருமண வரம், குழந்தை வரம், கண்நோய், கண்பார்வைக்கும் இங்கு வழிப்பட்டால் எல்லாம் நிவர்தியாகும் என்பது ஐதீகம். *திருமணம்&குழந்தைவரம், அம்மை&கண்நோய் உள்ளவர்களுக்கு பகிரவும்*

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இந்த லிங்கில் <<>>வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ளாம். பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு

image

தி.மலையில் சிவலிங்க மேனியில் சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நிகழ்ந்துள்ளது. தி.மலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை சன்னதியில், சிவலிங்க திருமேனியை சூரிய பகவான் வணங்குவதாக சொல்லப்படும் ஐதீகம். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நிகழ்வு நடந்தேறியது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்நிகழ்வை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர். ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

இரவு ரோந்து பணி அதிகாரிகளின் விவரங்கள்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (14.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர்களின் கைப்பேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதியில் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் நபர்களை கண்டால் 100 டயல் செய்யவும்.

News April 14, 2025

விவசாயிகளுக்கு நாளை கடைசி நாள்

image

மத்திய மற்றும் மாநில அரசினுடைய நலத்திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகளுக்கென தனி அடையாள எண் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான காலக்கெடு நாளையோடு(15.04.2025 ) முடிவடைகிறது. ஆகவே உங்களுடைய பட்டா, ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட மொபைல் எண் கொண்டு சென்று இ-சேவை மையத்தில் பதிவு செய்யவும். ஷேர் பண்ணுங்க

News April 14, 2025

பச்சிளம் ஆண் குழந்தை சடலம்; தாய் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் பெரியகள்ளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவரது நிலத்தில் நேற்று டிராக்டரில் உழவு செய்தபோது, பச்சிளம் ஆண் குழந்தை சடலம் வெளியானது. இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் விசாரித்தனர். அதில், அந்த நிலத்தின் அருகே வசிக்கும் மேகலா(39) என்பவருக்கு கடந்த 10ம் தேதி வீட்டிலேயே ஆண் குழந்தை இறந்து பிறந்ததும், அதை விவசாய நிலத்தில் புதைத்ததும் தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

error: Content is protected !!