Tiruvannamalai

News August 13, 2025

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு சிறப்பு மானியம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 132 விவசாயிகளிடமிருந்து 10,712.387 டன் கரும்பு பெறப்பட உள்ளது. அகல பார் அமைத்து பருசீவல் நாற்று, ஒரு பருக்கரணை நடவு உள்ளிட்ட முறைகளுக்கு மாநில அரசு மற்றும் மத்திய திட்டங்கள் மூலம் ஹெக்டருக்கு ரூ.3,000 – ரூ.18,625 வரை மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

தி.மலை: B.Sc,,B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில்<<>> வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 13, 2025

அதிர்ச்சி: தி.மலை மாவட்டத்தில் 6,925 பேர் பாதிப்பு

image

தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 20 பேர் நாய் கடித்து ரேபிஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். தி.மலை மாவட்டத்தில் ஜனவரி- ஆக.10 வரை சுமார் 6,925 பேரை தெருநாய்கள் கடித்திருப்பதாகவும், அதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உங்க ஏரியாவில் தெரு நாய் தொல்லை உள்ளதா? <>மாவட்டத்தின் அதிகாரபூர்வ தளத்தில் <<>>உள்ள நகராட்சி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப்படிவத்தினை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithuraitn.gov. in என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

News August 13, 2025

தி.மலை மக்களே.. இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

image

நம்ம தி.மலை மாவட்டத்தை பற்றி தெரிஞ்சுக்கலாமா
▶️நகராட்சி- (3)
▶️ மாநகராட்சி- (1)
▶️பேரூராட்சிகள்- (10)
▶️வருவாய் கோட்டம்- (3)
▶️தாலுகா- (12)
▶️வருவாய் வட்டங்கள் – (12)
▶️வருவாய் கிராமங்கள்- (1067)
▶️ஊராட்சி ஒன்றியம்- (18)
▶️கிராம பஞ்சாயத்து- (860)
▶️MP தொகுதி- (2)
▶️MLA தொகுதி- (8)
▶️மொத்த பரப்பளவு – 6,188 ச.கி.மீ
▶️ மக்கள் தொகை-24,64,875
▶️ இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க!

News August 13, 2025

தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, ஆரணி, வெம்பாக்கம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இடங்களின் முகவரி விவரங்களை மேலே உள்ள படத்தில் காணலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம், ரேஷன் அட்டை, ஆதார் திருத்தும் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் எங்கும் அலையாமல் ஒரே இடத்தில மனுவாக அளித்து பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News August 13, 2025

தி.மலை மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரத்தில் கரியமங்கலம் விபிஆர்சி கட்டடம், கலசப்பாக்கம் வட்டாரத்தில் ஆனைவாடி சமுதாய கூடம், சேத்துப்பட்டு வட்டாரத்தில் கேபிகே மஹால், ஆரணி வட்டாரத்தில் எம்ஆர்ஆர் மண்டபம், வெம்பாக்கம் வட்டாரத்தில் நாட்டேரி விபிஆர்சி கட்டடம் மற்றும் புதுப்பாளையம் கஜலஷ்மி மண்டபம் ஆகிய இடங்களில் இன்று(ஆக.13) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது.

News August 12, 2025

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (12.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 12, 2025

சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள சிறுமூர் ஈசானஓடை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து சென்று அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ரவிச்சந்திரன், தினகரன் சீனிவாசன், சேட்டு, வெற்றிவேல் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

News August 12, 2025

திருவண்ணாமலை தடகள மாணவிகளே தயாராகுங்கள்

image

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நாளை (13-08-2025) தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடத்தப்படும் திருவண்ணாமலை குறுவட்ட அளவிலான மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பங்கு பெறலாம் முதல் 3- இடம் பிடிக்கும் மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

error: Content is protected !!