India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.00 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.
திருப்பூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் ரூ.62265 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உள்ள ரூ. 43,000 சம்பளம் வழங்க கூடிய 6 காலிப் பணியிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு நாளை 14/08/2025 காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ள நபர்கள் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுங்கள். மேலும் பணி மற்றும் இதர விபரங்களை <
பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை தடுப்பதற்காகவும், விபத்துக்கள் நடைபெறும் விதங்களை அறிந்து கொள்வதற்காகவும், பல்லடம் காவல்துறையினர் சார்பில், முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இச்செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
திருப்பூர் மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
திருப்பூரில் மின் பாரமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், பழக்கரை, தேவம்பாளையம், கைகாட்டிப்புதூர், மங்கலம், பூமலூர், மலைக்கோவில், பள்ளிபாளையம், இடுவாய், வேலாயுதம்பாளையம், பெருந்தொழுவு, அலகுமலை, நாச்சியன்கோவில், கண்டியன்கோவில், கந்தாம்பாளையம், ஆண்டிபாளையம், விஜயாபுரம், கோவில்வழி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
திருப்பூரில் கடந்த சில மாதங்களில் வரதட்சணை கொடுமையில் ரிதன்யா தற்கொலை மற்றும் அதன் தாக்கம் குறையும் முன் ப்ரீத்தி என்ற மற்றுமொரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மக்களை காக்கும் காவலர் சண்முகவேல் கொலை , வழக்கறிஞர் முருகானந்தம் கொலை, தனிமையில் இருக்கும் முதியவர்களை தாக்குதல் என தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் திருப்பூர் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
திருப்பூர் மக்களே சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை <
திருப்பூர் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.