India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தேசிய அளவிலான எறிபந்து போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெருந்துறையில் உள்ள இந்துஸ்தான் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் கிட்ஸ் கிளப் பள்ளியின் மாணவன் பவின் கலந்து கொண்டு தேசிய அளவில் நடைபெறும் எறிபந்து போட்டிக்கு தேர்வாகியுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாராந்திர பொதுமக்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மேலும் இந்த குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் வருகிற அக்.27,28,29 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. இதில் பங்கேற்று பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் வினியோகம் உள்ளிட்டவைகள் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் மனிஷ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் அடிக்கடி மழை பெய்தது. மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில், வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழைகளில் வெள்ளகோவில் பகுதி அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத கார் மோதியதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்த அவிநாசிபாளையம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உயரிழந்தவர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.
1. UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF
2. AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் அனில் குமார் ஜனா. போயம்பாளையம் அடுத்த கங்கா நகர் பகுதியில் உள்ள பனியன் சாய தொழிற்சாலையில் பணிபுரிந்து விடுதியில் தங்கி வருகிறார். இவருக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அம்ரித் , அமான் உள்ளிட்ட 3 பேருக்கும் பட்டாசு வெடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று பேரும் அனில் குமார் ஜனாவை கட்டையால் அடித்து கொலை செய்தனர். அனுப்பர்பாளையம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

திருப்பூர் பட்டதாரிகளே.., வங்கியில் பணிபுரிய ஆசையா…? உங்கள் வங்கிப் பணிக் கனவைத் தொடங்க ஓர் அரிய வாய்ப்பு. அரசு வங்கியின் UCO வங்கியில் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க அக்.30ஆம் தேதியே கடைசி நாள். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க இங்கே <

திருப்பூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட 27 இருசக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்களை நாளை (24ஆம் தேதி) நல்லூர் ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவர்கள் நேற்று முதல், காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நேரில் சென்று பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.