India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள, 10 அங்கன்வாடி பணியாளர்; 33 உதவியாளர் பணியிடத்துக்கான நேரடி நியமனம் நடக்கிறது. அங்கன்வாடி பணியிடங்களில் பணியாற்ற விரும்புவோர், www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம். வரும், 23ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
திருப்பூரில் பிரதமரின் இண்டன்ஷிப் திட்டத்தில், முன்னணி நிறுவனங்களில், ஊக்கத்தொகையுடன், கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 10ம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரை படித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில்பயிற்சி வழங்கி, நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இதற்கு மாதம் ரூ.5000 ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்க வரும் 15ம் தேதிக்குள் இந்த <
திருப்பூர், சேவூர், முதலிபாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் நேற்று முந்தினம் இரவு, பணி முடிந்து, பைக்கில் வீடு திரும்பியுள்ளார். சேவூர் பவர் ஹவுஸ் அருகே வந்தபோது, குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த தங்கராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 262 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. இந்த பணிக்கு 21 வயது முதல் 40 வயது வரை உள்ள பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சியில் சமர்ப்பிக்கலாம்.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மெய்ரவன். இவரது மகள் அனுசயா 9ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவர் அடிக்கடி போனில் நீண்ட நேரம் பேசி வந்துள்ளார். இதனை பெற்றோர் கண்டித்ததால் மனம் உடைந்த அனுசயா, இன்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று(ஏப்.11) முதல் வரும் 13ஆம் தேதி வரை சூறாவளிக் காற்றுடன் லேசான மழை பெய்யக்கூடும் என வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மக்களே SHARE பண்ணுங்க.
திருப்பூரில் கோடை வெயிலின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே கடந்த சில தினங்களாக, திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில், பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில், இன்று இரவு 10 மணி வரை, மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
திருப்பூர் உடுமலை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின், அடர்ந்த வனத்தின் நடுவில், புகழ்பெற்ற கட்டளை மாரியம்மன் கோயில் உள்ளது. சுயம்புவாக, பாறையில் தோன்றிய மாரியம்மன், சக்திவாய்ந்த தெய்வமாகவும், வனத்தை காக்கும் வனதேவதையாக வீற்றிருக்கிறார். அம்மனை வனங்கினால் அனைத்து துன்பங்களும் நீங்குமாம். இங்கு அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தம், சகல வலிகளையும் போக்க வல்லதாம். இத SHARE பண்ணுங்க.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்மந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்ப்பித்து வந்த நிலையில், வட்ட அலுவங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilamtn.gov.in/citizen விண்ணப்பிக்க புதிய வசதியை திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.