India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் இன்று 79வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், முதல்வர் மனோன்மணி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கல்லூரியில் இன்று காலை சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் மணிஷ் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் சமாதான புறா பறக்க விடப்பட்டது. தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.86 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. திருப்பூர் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய <
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு பகுதியில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினரின் கோரிக்கைகளை ஏற்று புதிய பேருந்து நிலையத்திற்கு தீரன் சின்னமலை வடக்கு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
திருப்பூர் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய இந்த <
திருப்பூரில் சொந்த வீடு கட்ட முனைபவரா நீங்கள்? பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் தாமாக வீடு கட்ட அரசு சார்பாக ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், தமிழ்நாடு கூட்டுறவு வங்கியில் ரூ.75,00,000 வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இது 8.50 சதவீதம் முதல் 9.50 சதவீதம் வரை வட்டி விகீதத்தில் வழங்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்களை தெரிந்துகொள்ள <
திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள 6 ’கால்நடை ஆலோசகர்’ பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ரூ.43,000 வரை சம்பளம் வழங்கப்படும். பணிக்கான நேர்முகத் தேர்வு இன்று(ஆக.14) நடைபெறும் முகவரி: ருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர்- 641 605. (SHARE IT)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் ஓட்டல்களுடன் கூடிய பார்கள் என அனைத்துக் கடைகளும் நாளை(ஆக.15) சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படுகிறது. இந்நிலையில், நாளை சட்டவிரோதமாக ஏதேனும் மது பான விற்பனையை கண்டால் உடனே 10581-ஐ அணுகி புகார் அளிக்கலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ. 3 கோடி மதிப்பில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இதை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை 10.00 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்கள்.
Sorry, no posts matched your criteria.