Tiruppur

News April 15, 2025

திருப்பூரில் உள்ள இமயமலை!

image

திருப்பூர்: காங்கேயம் வட்டத்தில் உள்ளது சிவன்மலை. இமயமலையை சிவபெருமான் வில்லாக வளைத்து அசுரர்களை அழித்தபோது அதிலிருந்து விழுந்த சிறுதுண்டு தான் இந்த சிவன் மலை எனும் புராணக் கதை உண்டு. இந்த மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி பக்தர்களின் கனவில் வந்து உத்தரவு தருவாராம். அப்படி உத்தரவு தரும் பொருளுக்கும் நடக்கவிருக்கும் உலக நிகழ்வுகளுக்கும் சம்மந்தம் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். SHARE பண்ணுங்க!

News April 15, 2025

திருப்பூர்: அரசு ஊரக வளர்ச்சித்துறையில் வேலை

image

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த பணிக்கு, திருப்பூரை சேர்ந்தவர்கள் வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.45000. விண்ணப்பங்களை பதிவிறக்க செய்ய <>இந்த லிங்கை <<>>க்ளிக் பண்ணுங்க.

News April 15, 2025

திருப்பூர்: கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை!

image

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ராபித்ரா பிஸ்வால் (47). இவர், திருப்பூர், பொங்கலூர் மீனாட்சிவலசில் உள்ள, பனியன் கம்பனியில், வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால், மனைவி அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த ராபித்ரா பிஸ்வால், மருதுரையான் வலசில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 14, 2025

திருமணத் தடை நீக்கும் அர்ச்சுனேஸ்வரர் !

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம் . அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம்,குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 14, 2025

திருப்பூர்: சித்திரையில் கண்டிபாக செல்ல வேண்டிய கோயில்கள்!

image

கொண்டத்துக்காளியம்மன் கோயில் – பெருமாநல்லூர். வலுப்பூர் அம்மன் கோயில் – அழகுமலை. மாரியம்மன் கோயில் – கருவலூர். பொங்காளியம்மன் கோவில் – நல்லூர். பல்லடத்தம்மன் கோயில் – பூமலூர். வஞ்சியம்மன் கோயில் – மூலனூர். மாரியம்மன் கோயில் தாராபுரம். தில்லாபுரியம்மன் கோயில் – தாராபுரம். சித்திரை மாதம் அம்மன் கோயில்களுக்கு செல்வதால் வெப்பத்தினால் ஏற்படும் நோய்கள் அண்டாதாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

சிவன்மலை முருகன் கோயில்!

image

திருப்பூரில் புகழ்பெற்ற சிவன்மலை முருகன் கோயில் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் முருகனை, மற்ற விஷேச நாட்களை காட்டிலும் தமிழ் புத்தாண்டில் வணங்கினால் பல நன்மைகள் உண்டாகுமாம். முருகனை தமிழ் புத்தாண்டில் வழிபடுவதால், வாழ்வில் இதுவரை இருந்த தடைகள் நீங்கி, முன்னேற்றத்திற்கு வழிவகுக்குமாம். சங்கடங்கள் நீங்கி, மன நிம்மதி, சகல ஐஸ்வர்யங்களும் நிச்சயம் கிட்டுமாம். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

திருப்பூர்: ஆசிரியர் வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் பல்லடத்தில், மாநில அளவிலான, தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, மாபெரும் ஆசிரியர் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கம் நடத்தும் இந்த முகாம், கண்ணம்மாள் நேஷனல் பள்ளியில், வரும் 20-04-2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் கலந்து கொண்டு, ஆசிரியர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதை SHARE பண்ணுங்க.

News April 13, 2025

திருப்பூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி !

image

திருப்பூர், மூலனூர் அருகே உள்ள கரைப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (55). இவர் நேற்று காலை பெரமியத்தில் உள்ள, ஒருவரின் தென்னந்தோப்பில் உள்ள தென்னை மரங்களில், தேங்காய் வெட்டிக் கொண்டிருந்துள்ளார். அப்போது தென்னை மரத்தின் அருகில் சென்ற மின்சார கம்பியில், கொக்கி உரசியுள்ளது. இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட ராமசாமி, பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 12, 2025

திருப்பூர்: திடீர் மின்தடையா ? உடனே இதுக்கு கால் பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE!

News April 12, 2025

மனநோய் தீர்க்கும் திருமுருகன்!

image

தற்கால சூழலில் உடல் நோய்களை விட மன நோய்களே மக்களிடையே அதிகம் உள்ளது. அப்படிப்பட்ட எவ்வித மனநோயையும் தீர்த்து வைக்கும் ஓர் ஆலயம் தான் திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி ஆலயம் . இந்தக் கோயில் தீர்த்தத்தில் தினமும் குளித்து ஆறுமுகனின் ஆறாவது அதோ முகத்தை கண்டால் மனநோய் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரச்னை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!