India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர்: முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)

திருப்பூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் இந்த <

திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வழங்கப்படும். நேர்காணல் மட்டும் தேர்வு கிடையாது. விண்ணப்பிக்க இங்கே <

1) முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnrd.tn.gov.in/ செல்லவும். 2) பெயர், முகவரி, கல்வி, கைப்பேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விபரங்களை நிரப்பவும். 3)சாதிச் சான்றிதழ், புகைப்படம் (ம) கையொப்பத்தை பதிவேற்றம் செய்யவும். 4) உங்கள் கைப்பேசி எண்ணுக்கு ஓடிபி வரும், அதை சமர்ப்பித்து பணத்தை செலுத்தவும். 5) இறுதியாக உங்கள் படிவம் வரும் அதை டவுன்லோடு செய்து வைத்துக்கொள்ளவும்.

திருப்பூர் மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா?. இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! <

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, அவிநாசி, பல்லடம், காங்கேயம், தாராபுரம், ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.மனிஷ் நாரணவரே மற்றும் அனைத்துத் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் 6வது மாரத்தான் போட்டி வரும் டிசம்பர் 28ஆம் தேதி வெள்ளகோவிலில் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்துக்கொள்ள விரும்பும் அனைவரும் கீழே உள்ள இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். https://share.google/1AKm7aVZbH218HHhW என்ற இனையதல முகவரியில் முன்பதிவு செய்யலாம்.

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 29-ம் தேதி அறை எண் 20-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிர்வாக காரணங்களால் ஒரு நாள் முன்னதாக வருகிற 28-ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.