Tiruppur

News August 21, 2025

திருப்பூர் கல்லூரி சாலையில் போக்குவரத்து மாற்றம்

image

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் பகுதியில், மங்களம் சாலை மற்றும் சிறுபூலுவப்பட்டியை பகுதியை இணைக்க கூடிய வகையில், ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது‌. மேம்பால பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 2 நாட்களுக்கு வஞ்சிபாளையத்திலிருந்து புஷ்பா ரவுண்டானா வருகின்ற பகுதியில், சோதனை அடிப்படையில் தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 20.08.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியில் உள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், முருகம்பாளையம், கல்லம்பாளையம், சாமிநாதபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News August 20, 2025

திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின் ரத்து

image

திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

திருப்பூர்: திருடு போன PHONE கண்டுபிடிப்பது எப்படி?

image

உங்கள் Phone காணாமல் போயிட்டா? இல்ல திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இணையத்தில் <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆ கண்டுபுடிக்கலாம். கிட்டத்தட்ட 5 லட்சம் Phone இப்படி கண்டுபுடிச்சிருக்காங்க! SHARE பண்ணுங்க!

News August 20, 2025

தாராபுரம்: இலவச தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி

image

திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதி, மூலனூர் ஒன்றியம், மூலனூர் அறப் போர் இயக்கத்தின் சார்பில் வருகிற ஆக.23ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மூலனூர் சார் பதிவாளர் அலுவலகம் அருகில் உள்ள திலகம் திருமண மண்டபத்தில், இலவச தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News August 20, 2025

அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

image

திருப்பூர் மக்களே…, வருகிற ஆக.22ஆம் தேதி பல்லடம் சாலையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது என கலெக்டர் அறிவித்துள்ளார். 10 தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ள இந்த வேலை வாய்ப்பு முகாமில் மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கும் வேலைகளுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, விவரங்களுக்கு <>இங்கே கிளிக்.<<>>(SHARE IT)

News August 20, 2025

திருப்பூர் இரவு ரோந்து போலீசார் எண் அறிவிப்பு

image

திருப்பூர் மாநகர பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் இரவு ரோந்து பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் போலீசாரின் எண்கள் காவல் கட்டுப்பட்டு அறையில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் குற்ற செயல்கள் நடைபெற்றால் பொதுமக்கள் அந்த எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும் அவசர உதவிக்கு என் 100-ஐ அழைக்கலாம்.

News August 19, 2025

திருப்பூர்: ரூ.60,000 சம்பளத்தில் அரசு வங்கியில் வேலை!

image

திருப்பூர் மக்களே, தமிழ்நாட்டில் உள்ள ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள 30 கிளார்க் (Clerk)/Customer Service Associate பணியிடங்களை நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதில் சேர விருப்பமுள்ளவர்கள் வரும் செப்.8ம் தேதிக்குள் <>இந்த லிங்கை க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!