India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ’திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளர் தினமான மே 1ஆம் தேதி காலை 11:00 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அந்தந்த ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக சிறந்த ஆலோசனைகள் குறித்து விவாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தினருக்கு SHARE பண்ணுங்க!
திருப்பூர் – ஊத்துக்குளி சாலையில் உள்ள சுக்ரீஸ்வரர் கோயிலில் உள்ள லிங்கம் ராமாயணத்தில் சுக்ரீவனால் வழிபடப்பட்டது என்கிறது புராணம். இங்குள்ள சுக்ரீஸ்வரருக்கு ‘மிளகு ஈஸ்வரர்’ என்கிற பெயரும் உண்டு. அதற்கு காரணம், இந்தக் கோயிலுக்கு வந்து மிளகு பூஜை செய்தால் நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியத்தை நடத்த முனையும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
திருப்பூரில் கோடை வெப்பத்தினால், தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளன. எனவே உங்கள் பகுதியில் ஏதேனும் தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொள்ளவும். ▶️திருப்பூர் தீயணைப்புத்துறை டிவிஸ்னல் ஆப்பீஸ் 0421-2472101. ▶️மாவட்ட தீயணைப்பு அதிகாரி 0421-2476101. ▶️ தீ அணைப்பு நிலைய அதிகாரி பல்லடம் 04255-253110. ▶️ தீ அணைப்பு நிலைய அதிகாரி திருப்பூர் 0421-2472201. இதை SHARE பண்ணுங்க.
திருப்பூர், கணக்கம்பாளையம், காந்திநகர் பகுதியில் வசித்து வருபவர் மவுதீஸ்வரன்(17). கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால், நேற்று பொடாரம்பாளையம் அருகே உள்ள கரைக்குட்டையில் நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற மவுதீஸ்வரன், நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம் புத்தரச்சல் கிராமத்தில் புகழ்பெற்ற 108 பைரவர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில், 21 அடி உயரத்தில் கால பைரவர் சிலை உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, இங்கு பைரவர் வீற்றிருக்கிறார். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்குமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ராமமூர்த்தி இன்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பெரியார் காலனி கருப்பராயன் கோவில் அருகே தார் சாலைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகளிடம், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 43 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி விண்ணப்பங்களை<
அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க.
எர்ணாகுளம்-பாட்னா (06085) வாராந்திர சிறப்பு ரெயில் வரும் 25ஆம் தேதி முதல் மே.30ஆம் தேதி வரை எர்ணாகுளத்தில் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமைகளில் அதிகாலை 3.30 மணிக்கு பாட்னா சென்றடையும். பாட்னா – எர்ணாகுளம்(06086) வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 28ஆம் தேதி முதல் ஜீன்.2ஆம் தேதி வரை திங்கட்கிழமைகளில் பாட்னாவில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை காலை 10.30 செல்லும்.
திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஏப்.22) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கயம், தாராபுரம் பகுதிகளில் இன்று இரவு நேர ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.