Tiruppur

News February 26, 2025

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொரியாளர் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News February 26, 2025

திருப்பூரில் நாளை மின்தடை அறிவிப்பு

image

திருப்பூரில், மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை, கீழ்கண்ட ராமமூர்த்தி நகர், பிஎன் சாலை, ராமையா காலனி, ரங்கநாதபுரம், கொங்கு நகர், ஈ.ஆர்.பி. நகர், அப்பாச்சி நகர், கோல்டன் நகர், திருநீலகண்டபுரம், எஸ்வி காலனி, கொங்கு பிரதான சாலை, பண்டிட் நகர், வ.உ.சி. நகர், டி.எஸ்.ஆர். லேஅவுட், முத்துநகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 26, 2025

திருப்பூர் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

image

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்ற இருவரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் கடலூரைச் சேர்ந்த விக்ரம்(24), ஜெயசீலன்(20) என்பதும் இவர்கள் அணைப்பாளையம் பகுதியில் நிறுவனத்தில் வேலை செய்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

News February 26, 2025

குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் தற்பொழுது நடமாடி வருகின்றன. தற்சமயம் சில தினங்களாகவே குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக கூறப்படுகின்றது இந்த நிலையில் வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். குரங்குகள் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் உயிரிழந்துள்ளதால் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். 

News February 26, 2025

குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

image

உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் பகுதியில் ஏராளமான குரங்குகள் தற்பொழுது நடமாடி வருகின்றன. தற்சமயம் சில தினங்களாகவே குரங்குகள் மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாக கூறப்படுகின்றது இந்த நிலையில் வனத்துறையினர் இன்று ஆய்வு செய்தனர். குரங்குகள் நோய்வாய்ப்பட்டு நடக்க முடியாமல் உயிரிழந்துள்ளதால் ரத்த மாதிரி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். 

News February 25, 2025

திருப்பூர் மாவட்ட இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 25.02.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு, திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிப்பு வெளியானது. அவிநாசி, பல்லடம், உடுமலைப்பேட்டை, காங்கேயம், தாராபுரம் ஆகிய பகுதிகளில் இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News February 25, 2025

சிவன்மலை உத்தரவு பெட்டியில் வைக்கோல்

image

சிவன்மலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் ஒவ்வொரு முறையும் பக்தர் கனவில் தோன்றும் ஒரு பொருள் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இன்றைய தினம் உத்தரவு போட்டியில் வைக்கோல் வைத்து பூஜை நடத்தப்பட்டு வருகிறது. உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளானது ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஐதீகம்

News February 25, 2025

திருப்பூரில் வேலை! உடனே விண்ணப்பிக்கவும்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருப்பூரில் உள்ள காலியிடங்கள் உள்ளன. இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். <>இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்<<>>. ஷேர் பண்ணுங்க

News February 25, 2025

முதல்வர் மருந்தகம் திறப்பு 

image

திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 17 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் ஆயிரம் முதல்வர் மருந்தகங்களை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

News February 25, 2025

உடுமலை அருகே விபத்து

image

உடுமலைப்பேட்டை புறவழிச்சாலையில் நின்ற லாரியின் பின்னால் கேரளா மாநிலம் மலப்புரத்தில் இருந்து பழனிக்குச் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்தவரும், அவரது இரண்டு வயது ஆண் குழந்தையும் உயிரிழந்தனர்.காருக்குள் சிக்கியிருந்த பெண்ணையும், குழந்தையும் மீட்ட போலீசார், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!