Tiruppur

News October 6, 2025

திருப்பூர்: B.E/.Tech முடித்தால் உடனடி அரசு வேலை!

image

திருப்பூர் மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. விண்ணப்பிக்க அக்.20ஆம் தேதியே கடைசி நாள். செம வாய்ப்பு.., உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 5, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News October 5, 2025

திருப்பூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

திருப்பூர்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News October 5, 2025

திருப்பூரில் உயிரை பறித்த இருமல் மருந்து

image

வடமாநிலங்களில் இருமல் மருந்து குடித்ததில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ‘கோல்ட்ரிப்’ இருமல் மருந்து விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் இம்மருந்து சப்ளை செய்யப்படவில்லை என கோவை மண்டல மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குனர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.மருத்துவர் அறிவுரை இல்லாமல் குழந்தைகளுக்கு எந்த விதமான மருந்தையும் கொடுக்க வேண்டாம் என அறிவுறை!

News October 5, 2025

திருப்பூர்: தலை நசுங்கி தொழிலாளி பலி

image

திருப்பூர், எம். ஜி. ஆர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (50). பழைய பொருட்கள் வாங்கி விற்கும் கூலி தொழிலாளி.இந்நிலையில் இவர் இன்று காலை இவரது மொபட்டில் காங்கேயம் – கரூர் சாலையில் சென்றுள்ளார்.அப்போது முத்தூர் பிரிவு சாலை பகுதியில் அதிவேகமாக சென்ற அரசு பேருந்து கூலி தொழிலாளி மீது மோதியது. இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

News October 5, 2025

திருப்பூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளில் வருகிற 11-ந் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம், அந்தந்த ஊராட்சிகளில் பொது இடங்களில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், கிராமங்களின் அத்தியாவசியமான தேவைகளை தேர்வு செய்து கிராம சபை ஒப்புதல் பெறுதல், சாதி பெயர்கள் கொண்ட குக்கிராமங்கள், சாலைகள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல் குறித்து விவாதிக்கப்படும் என கலெக்டர் மனிஷ் கூறினார்.

News October 5, 2025

திருப்பூர்: நீங்க B.E – ஆ? இந்தியன் வங்கி வேலை ரெடி!

image

திருப்பூர் மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <>கிளிக்<<>> செய்து 13.10.2025-ம் தேதிக்குள்ளாக விண்ணப்பிக்கலாம். யாருக்காவது உதவும் இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க.

News October 5, 2025

திருப்பூர்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். திருப்பூர் மக்களே யாருக்காவது பயன்படும் எனவே இதனை அனைவருக்கும் அதிகம் SHARE பண்ணுங்க!

News October 5, 2025

திருப்பூர் அருகே விபத்து: ஒருவர் பலி!

image

உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன்குமார் ,சுகன்யா தனது இரு குழந்தைகளுடன் பைக்கில் புஷ்பத்தூரில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்ற போது, கருப்புசாமி புதூர் பகுதியில் பைக் நிலை தடுமாறி சாலையோர தடுப்பில் மோதியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சுகன்யா உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 5, 2025

திருப்பூர்: ஐ.டி.ஊழியரிடம் லேப்டாப் திருடியவர் கைது

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகர் (43). இவர், சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூருக்கு செல்ல கடந்த 1ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் ஏறி பிரபாகர் பயணித்தார். அப்போது இவரது லேப்டாப் மற்றும் பொருட்களை திருடிய வெங்கடதாம்பட்டிபுதூரை சேர்ந்த சிலம்பரசன் (31) என்பவரை சேலம் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!