India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் கானாங்குளம் வையாபுரி கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பரமசிவம் ( 47). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கனவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரமசிவத்தை யாரும் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இன்று அவர் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 92.06% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 93.10% பேரும், மாணவியர் 97.07% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 95.23% தேர்ச்சி பெற்று திருப்பூர் 3ஆவது இடத்தை பெற்றுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

உடுமலையில் 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுவன் சோப் ஆயில் குடித்து தற்கொலைக்கு இன்று(மே 14) முயன்ற நிலையில், சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் தொந்தரவு செய்த நிலையில், மகளிர் காவல் துறையினர் மே 12ம் தேதி இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மேலும் ஒரு 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் மாம்பழம் மற்றும் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள் குடோன்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், திருப்பூரில் 102 கடைகளில் ஆய்வு செய்து 12 கடைகளில் விதிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று செயற்கை முறையில் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று(மே 13) 2 மணி அளவில் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை காரணமாக வார சந்தையில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வியாபாரம் மிகவும் மந்தமாக நடைபெற்றது.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் பிரச்சனையால் திருப்பூர் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. கடன் தந்தவர்கள் நெருக்கடியால் இன்று விஜயமங்கலம், ஊத்துக்குளி இரும்புப் பாதையில் ரயில் முன் பாய்ந்து சுரேஷ் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
Sorry, no posts matched your criteria.