India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தாராபுரத்தில் மிகவும் பழமையான காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன்துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம். (SHAREit)

திருப்பூர் மக்களே.., குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மிஷன் வத்சால்யா திட்டத்தின் கீழ் குழந்தை சேவை மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. தேர்வு எதுவும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்திற்கு <

திருப்பூர்: தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகின்ற அக்.8ஆம் தேதி பொதுமக்களுக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே மின் தொடர்பான புகார்களை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டத்தில் தெரிவித்து பயனடையலாம் என செயற்பொறியாளர் கேசவராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘Broadband technician’பயிற்சியுடன் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி வருகிற அக்.16ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

திருப்பூர் மக்களே.., நமது மவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ‘தொடர்பு அலுவலர்’ பணிக்கு தமிழக அரசின் ’வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியில் கலந்துகொள்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி. மொத்தம் 60 காலியிடங்கள் இதற்கு உள்ளன. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

திருப்பூர் மக்களே.., உங்கள் ஊரில் உள்ள கனரா வங்கியில் வேலை வேண்டுமா..? உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. கனரா வங்கியில் காலியாக உள்ள 394 அப்ரண்டிஸ் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்தால் போதுமானது. உங்கள் வங்கி வேலைக் கனவைத் தொடங்க இது அருமையான வாய்ப்பு. இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் <

திருப்பூர்: வலையங்காடு பகுதியில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘கரூரில் இறந்த 41 பேருக்கும் நீதி வேண்டும். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். இதற்கு முழு காரணமான தவெக தலைவர் ஜோசப் விஜய்யை கைது செய்ய வேண்டும். தவெக-வை தடை செய்ய வேண்டும். தவெக-வின் பதிவை ரத்து செய்ய தேர்தல் கமிஷனிடம் புகார் மனு கொடுக்க உள்ளோம்’ எனப் பேசினார்.

திருப்பூர் மக்களே.., கணினி மேம்பாட்டு மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதில் Project Associate பணிக்கு B.E/ B.Tech முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.10.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், தாராபுரம், உடுமலை, அவினாசி, பல்லடம் ஆகிய பகுதியிலுள்ள காவல் துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

திருப்பூர்: மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே ‘94987 94987’ என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது . இதன்மூலம் பயனாளர்கள் எங்கிருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.