Tiruppur

News March 3, 2025

ஊத்துக்குளி அருகே வைரலாகும் அதிமுகவின் நோட்டீஸ்

image

மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாளை முன்னிட்டு பெருந்துறை சட்டமன்ற தொகுதியை சார்பில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வருகின்ற ஐந்தாம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக அச்சடிக்கப்பட்ட அறிவிப்பில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் முதல் பரிசாக தங்க நாணயம் மற்றும் 300 நபர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 3, 2025

மாபெரும் வேளாண் கண்காட்சிக்கு அழைப்பு

image

திருச்சியில் மாபெரும் வேளாண் கண்காட்சி சத்யம் கிளினிக் மற்றும் பசுமை விகடன் இணைந்து வழங்கும் அக்ரி எக்ஸ்போ-2025. இது வரும், மார்ச் 7, 8, 9 (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) ஆகிய தினங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற இருக்கிறது. நிகழ்வு நடைபெறும் இடம்: கலையரங்கம், மத்திய பேருந்து நிலையம் அருகில். வேளாண் புதுமை மற்றும் அதன் தொழில்நுட்பங்களை தெரிந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News March 3, 2025

+ 2 பொது தேர்வு: வாழ்த்து தெரிவித்த அமைச்சர்

image

தாராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான கயல்விழி செல்வராஜ் இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணாக்கர்களின் எதிர்காலத்திற்கு முதல்வர் தலைமையிலான இவ்வரசு என்றும் துணை இருக்கும் என்ற நம்பிக்கையோடு பதற்றமின்றி தேர்வு எழுதி அனைவரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

News March 3, 2025

திருப்பூர் போஸ்ட் ஆபீஸில் வேலை..இன்றே கடைசி நாள்

image

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருப்பூரில் மட்டும் 95 காலிப்பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.10,000 முதல் 29ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்றே (மார்ச்.03) கடைசிநாளாகும். விண்ணப்பிக்க இங்கே<> க்ளிக் <<>>செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 3, 2025

திருப்பூரில் மாநில அளவிலான செஸ் போட்டி

image

திருப்பூர் மாவட்ட சதுரங்க கழகத்தின் அனுமதியுடன், கிங்ஸ் செஸ் அகாடமி மற்றும் தாராபுரம் செஸ் அகாடமி சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டிகள் திருப்பூர் முத்தணம்பாளையம் ஆக்ஸ்போர்டு மாடர்ன் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் 9,12,15 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளில் மாணவ-மாணவிகளும், ஓபன் பிரிவில் ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

News March 2, 2025

தூத்துக்குடி துறைமுகத்தில் கட்டாய வசூல்

image

திருப்பூர் எக்ஸ்போர்ட் கார்கோ ட்ரான்ஸ்போர்ட் அசோசியேஷன் சார்பில் கல்லூரி சாலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திருப்பூரில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படும் சரக்குகளுக்கு கட்டாய இறக்கு கூலி 2,000 முதல் 3,000 ரூபாய் வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. வரும் 5ஆம் தேதி முதல் இறக்கு கூலி வழங்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

News March 2, 2025

திருப்பூர் மாவட்டத்தில் நாளை தேர்வு எழுதும் 28,000 பேர் 

image

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) +2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. மாவட்டம் முழுவதும் 221 பள்ளிகளில் 28 ஆயிரம் மாணவர் மாணவிகள் தேர்வை எழுத உள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவிகள் அச்சமின்றி தேர்வை எழுத வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

News March 2, 2025

முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்த அமைச்சர், மா.செ.

image

முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 72வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இந்நிலையில், அவரை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இதுபோன்று அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளர்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

News March 2, 2025

அமராவதி: 160 கோடி நிதி ஒதுக்க பரிந்துரை

image

உடுமலை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தற்பொழுது போதி நிதி ஒதுக்காத காரணத்தால் சில மாதங்களாகவே இயந்திரங்கள் பழுது காரணமாக ஆலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகள் புனரமைப்பு நிதி ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் ஈடுபட்ட நிலையில், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஆலையை புனரமைக்க 160 கோடி தமிழக அரசுக்கு நிதி ஒதுக்க ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளதாக கூறினார்.

News March 2, 2025

திருப்பூரில் போலீசார் வாகன தணிக்கை தீவிரம்

image

திருப்பூர் மாநகரின் குற்றச் சம்பவங்களைத் தவிர்க்கவும், வெளி மாநிலங்களிலிருந்து திருப்பூரில் புழக்கத்திற்கு கொண்டுவரப்படும் கஞ்சா, கான்ஸ், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களைக் கண்டறியவும் திருப்பூர் மாநகர போலீசார் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பேருந்து நிலையம, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய சந்திப்புகளில் காவல்துறையினர் சுழற்சி முறையில் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!