India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேற்குவங்கத்தை சேர்ந்தவர் பிரபாத் மண்டோல். இவர் திருப்பூர் கே.என்.எஸ் கார்டன் பகுதியில் தங்கி இருந்து அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளார். 3வது மாடியில் பணியில் இருந்த அவர், திடீரென தவறி கீழே விழுந்து, படுகாயமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்ற வைத்த, கட்டிட உரிமையாளர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் தாராபுரத்தில் மிகவும் பழமையான காடு ஹனுமந்தராய சுவாமி கோயில் உள்ளது. 1810 ஆண்டில் கோவை ஆட்சியராக இருந்த டீன் துரை, புற்றுநோய் குணமடைய, ஹனுமந்தராய சுவாமியை வேண்டியுள்ளார். அவ்வாறே நோயும் குணமடைந்ததாம். அதற்கு நன்றிக்கடனாக கோயில் கர்பகிரகத்தை, டீன்துரை பெரிதாக கட்டித்தந்தாராம். இத்தகையை சக்திவாயந்த ஹனுமந்தராய சுவாமியை, ஒரு முறை சென்று வணங்கினால், சர்வ தோஷம், நோய்களும் நிவர்த்தியடையுமாம்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அஜித் பர்மன் என்பவர், திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே கயிறு தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் இவரது தந்தை அமர் பருமனுக்கும் செல்போனில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த அஜித் பர்மன், செல்போன் இணைப்பை துண்டித்து விட்டு, அருகில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 சிறப்பு அதிகாரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. B.Tech/B.E, Post Graduate, CA, M.Sc, MBA/PGDM, MCA, போன்ற படிப்புகளில் தேர்ச்சிபெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இதற்கு வரும் 13ம் தேதிக்குள், <

திருப்பூர் மக்களே.., எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், அரசுப்பேருந்து, ஆம்னி பஸ்களில் அதீத டிக்கெட் தொகை, மோசடி போன்ற சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க அரசு சார்பாக எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 044-24749002, 044-26280445 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச இலகுரக வாகன ஓட்டுநர் (Light Motor Vehicle Driver) பயிற்சி வழங்கப்படுகிறது. 21 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், கார், வேன், சிறிய ரக லாரி ஓட்டுநர் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. மேலும் வாகன பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து நுட்பங்களு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் (அக்.09) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மங்கலம், பூமலூர், பள்ளிபாளையம், இடுவாய், பாரதிபுரம், சீராணம்பாளையம், கிடாத்துறை புதூர், வேலாயுதம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளையம், அணைப்புதுர், பழக்கரை, தேவம்பாளையம், நல்லிக்கவுண்டம்பாளையம், கைகாட்டிப்புதூர், குளத்துப்பாளையம், பெரியாயிபாளையம், நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

திருப்பூர் ரயில் நிலையம் அருகே வடக்கு போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வில்சன் என்பவரை சோதனை செய்தபோது, அவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர். அவர்களிடமிருந்து இன்று ஒரே நாளில் 324 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் தினமும் ஏரியா வாரியாக திருப்பூர் மாவட்டம் முழுவதும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் பெயர் மற்றும் செல்போன் எண்கள் சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விபரத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டு உள்ளது அதனை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் குற்ற செயல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
Sorry, no posts matched your criteria.