India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை செய்ததில் 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 9 பேரை போக்சோவில் நேற்றிரவு கைது செய்தனர்.

திருப்பூர் பழைய பஸ் நிலையம் முதல் தெற்கு போலீஸ் நிலையம் வரையிலான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனால் தாராபுரம் சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி சி ஒன் பாயிண்ட், எம் ஜி பி ஷோரூம் வழியாகவும், காங்கேயத்திலிருந்து பழைய பஸ் நிலையம் வரும் வாகனங்கள் ராஜீவ் நகர் மற்றும் எம் ஜி பி ஷோரும் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ளது அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பரந்த நீர்த்தேக்க அமராவதி அணை. 1957ஆம் ஆண்டு காமராஜரால் இவ்வணை கட்டப்பட்டது. இந்த அணை, வேளாண்மைக்காகவும், வெள்ளத்தின் போது நீரைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கட்டப்பட்டது. மேலும், இது ஒரு மீன்பிடித் தலமாகவும் இருக்கிறது. மேலும், சேற்று முதலைகள், மக்கர் முதலைகள் பிடிக்கப்படாமல், இயற்கையாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

திருப்பூர் மாவட்டம்
உடுமலை  நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில்  கோயமுத்தூர் அணியும் பெரிய குளம் அணியும் மோதிய  போட்டியில் கோயமுத்தூர் யுனைடெட் அணி கோப்பையை கைப்பற்றியது .பரிசுகளை திமுக நகர செயலாளர் வேலுச்சாமி, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பலர் வழங்கினர்.

சென்னையில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த உடற்பயிற்சி நிலையம் திருப்பூரில் தங்களது கிளையை நேற்று திறந்தது. இதனை நடிகர் பரத் மற்றும் மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மைய தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்; எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் ஆறு சாய ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை, செய்து வரும் நிறுவனம் சுத்திகரிப்புக்கான தொகையை வழங்காமல், நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனம், விளக்கம் அளிக்க அதிகாரிகள் நோட்டீஸ் நேற்று அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அம்மன் நகர் பகுதியில் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி மகாலட்சுமி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண் பெற்ற மாநில அளவில் முதலிடம் பெற்றார். அவரை திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததோடு மாணவியின் கல்விக்கான ஊக்கத்தொகையும் வழங்கினார்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் முதல் தாராபுரம் சாலை தெற்கு காவல் நிலையம் வரை அம்ருத் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டது. இதன் காரணமாக பழைய பேருந்து நிலையம் முதல் தெற்கு காவல் நிலையம் வரை செல்லும் சாலை அடைக்கப்பட்டு வாகன ஓட்டிகல் மாற்று பாதையில் செல்ல மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் சுட்டெரித்து வந்தாலும், சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் வரும் மே.16 அன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கோவையில் இருந்து லாரி ஒன்று கரூருக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்றுள்ளது. அப்போது கரூரில் இருந்து கோவை நோக்கி சென்ற கார் இன்று அதிகாலை காங்கேயம் அருகே வந்த போது லாரி மீது மோதியது. இதில்
காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.