Tiruppur

News March 21, 2024

பல்லடம் சட்டமன்றத் தொகுதியின் புதிய திமுக மக்களவை வேட்பாளர்

image

கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ஆர். நடராஜன் வெற்றிபெற்றிருந்தார். ஆனால், இந்த முறை இந்தத் தொகுதியில், பாஜக-விற்கு வாய்ப்புள்ளதால் திமுக-வே போட்டியிட முடிவு செய்தது. திமுக சார்பில், கணபதி பி. ராஜ்குமார் போட்டியிடவுள்ளார். இவர் 2014இல் கோயம்புத்தூரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து திமுக-வில் இணைந்தார்.

News March 21, 2024

தாராபுரம், காங்கேயம் சட்டமன்றதொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

ஈரோடு தொகுதி கடந்த முறை மதிமுகவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.தற்போது மதிமுக-விற்கு திருச்சி தொகுதி அளிக்கப்பட்டிருப்பதால், திமுக-வே இத்தொகுதியில் போட்டியிடுகிறது.இந்தத் தொகுதியில் திமுக-வின் சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.மாநில இளைஞரணியின் துணைச் செயலாளரார் ஆவார்.இந்தத் தேர்தலில் திமுக இளைஞரணியிலிருந்து போட்டியிடும் ஒரே வேட்பாளரும் இவர்தான். தாராபுரம், காங்கேயம் ஆகியவை இத்தொகுதியில் அடங்கும்.

News March 21, 2024

திருப்பூர்: சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு

image

திருப்பூர் மடத்துக்குளம் அருகே சோழமாதேவியை சேர்ந்த திருமூர்த்தி, அழகன் ஆகிய இருவரும் நேற்று (மார்ச்.20) இரவு உடுமலை மடத்துக்குளம் நான்கு வழிச்சாலையில், பழனி செல்லும் ஒருவழிப்பாதையில் எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த சரக்கு வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து மடத்துக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 21, 2024

பொள்ளாச்சி தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

நீண்ட காலமாக அதிமுக வசம் இருந்த பொள்ளாச்சித் தொகுதியை கடந்த 2019ஆம் ஆண்டுதான் திமுக வென்றது. 9 முறை அதிமுக வென்ற தொகுதியை திமுக-வின் சார்பில் போட்டியிட்ட கு.சண்முகசுந்தரம் வெற்றிபெற்றார். ஆனால், இம்முறை வேட்பாளரை திமுக மாற்றியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்வரசாமி இத்தொகுதியில் போட்டியிடவுள்ளார். உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகியவை பொள்ளாச்சித் தொகுதிக்குள் அடங்கும்.

News March 21, 2024

2ம் கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

திருப்பூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அருணாசலம் அறிவிக்கப்பட்டுள்ளார். 2024-மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 21) வெளியிட்டுள்ளார்.

News March 21, 2024

தேர்தல் பறக்கும் படை அதிரடி வாகன சோதனை

image

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்திற்கு திமுக சார்பில் 4 எம்பி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, நீலகிரி மக்களவை வேட்பாளர் ஆ.ராசா அவிநாசி சட்டமன்ற தொகுதியிலும், பொள்ளாச்சி மக்களவை வேட்பாளர் ஈஸ்வரசாமி உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளிலும், கோவை மக்களவை தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பல்லடம் தொகுதியிலும், ஈரோடு மக்களவை வேட்பாளர் பிரகாஷ் தாராபுரம், காங்கேயம் தொகுதிகளிலும் களமிறங்குகின்றனர்.

News March 20, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு 5 எம்பிக்கள்

image

எம்பி தேர்தலை பொருத்தமட்டில் திருப்பூர் வடக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிகள் திருப்பூர் எம்பி தொகுதியிலும் – திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி சட்டமன்ற தொகுதி நீலகிரி எம்பி தொகுதியிலும் – உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் பொள்ளாச்சி எம்பி தொகுதியிலும் – பல்லடம் சட்டமன்ற தொகுதி கோவை எம்பி தொகுதியிலும் – தாராபுரம், காங்கேயம் சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு எம்பி தொகுதியிலும் அடங்கும்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: இன்றே கடைசி நாள்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம்: மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

error: Content is protected !!