India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் உயிர்ம வேளாண்மை நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் அங்கக உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது தமிழக அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைத்தளத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் பதிவு கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழக்கறிஞர் குமார் பூங்கொடி ஆகியோரின் உறவினர் இந்திராணி கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இவருக்கான இறுதி மரியாதை தாராபுரம் மின் மயானத்தில் எவ்வித சாதி மத சடங்குகளும் இன்றி நடந்தது. அதற்கு முன்னதாக வீட்டிலிருந்து அவரது உடலை பெண்கள் மட்டுமே சுமந்து சென்றனர். மின் மயானத்திற்கு செல்லாத பெண்கள் தற்போது சடலத்தையேசுமந்து சென்றது மாவட்டம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது. வணிகவியல் தரவரிசை 3025 முதல் 4000 வரை உள்ளவர்கள், ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காதவர்கள் இதில் பங்கேற்கலாம். மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வர வேண்டும். மேலும் +1 மற்றும் +2 மதிப்பெண், மாற்று, சாதி சான்றிதழ்களின் அசல், இவற்றின் 2 நகல்கள், 6 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, கட்டணத் தொகையுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

திருப்பூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் தொடக்க நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளில் 5 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகுதி உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் திருப்பூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு ஜூலை 8 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

தமிழ்நாடு சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வாரியத்தின் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவுசெய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீர்மரபினர்
நலவாரியத்தில்
பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் வாரியத்தின் உறுப்பினராக பதிவு செய்தவர்கள் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உறுப்பினராக பதிவுசெய்தவர்கள் தங்கள் உறுப்பினர் பதிவை ஆட்சியர் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 10ம் வகுப்பு பயின்று தற்போது +1 செல்லும் அரசுப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் திறனாய்வு தேர்வு ஜூலை 21ஆம் தேதி நடக்க இருந்தது. இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 4ம் தேதி முதல்வர் திறனாய்வு தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதால் விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில்
தமிழ்நாடு தினம்
ஜூலை 10ம் தேதி கொண்டாடும் நிலையில் பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் பங்கேற்கலாம் என மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி போட்டிகளில பங்கேற்க விரும்புவோர் தகவல்களை ddtamil607@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். கட்டுரை போட்டி ‘ஆட்சி மொழி தமிழ்’ என்ற தலைப்பில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண், களிமண்ணை விவசாயப் பணிகள் மற்றும் மண்பாண்ட தொழிலுக்காக இலவசமாக எடுத்துச் செல்ல அனுமதி வழங்குவது குறித்து திருப்பூர் மாவட்ட அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தேவைப்படும் விவசாயிகள் https://tnesevai.gov.in, www.tirupur.nic.in என்ற இணையதளங்களில் விண்ணப்பித்து பயன் அடையலாம் என மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலைய எஸ்ஐ-க்கள் 18 பேரை கடந்த 29ம் தேதி இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டிருந்தார். ஆனால் பல எஸ்ஐ-க்கள் இடம் மாறாமல் பழைய பணியிடங்களில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்று ஓபன் மைக்கில் (மைக் – 10) பேசிய மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா இடமாறாத எஸ்ஐ-க்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
Sorry, no posts matched your criteria.