Tiruppur

News March 28, 2024

பதற்றமான வாக்குச்சாவடி பகுதிகளில் அணிவகுப்பு

image

திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News March 28, 2024

திருப்பூரில் 38 பேர் வேட்புமனு தாக்கல்

image

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் (திருப்பூர் கலெக்டர்) தெரிவித்துள்ளார்.

News March 28, 2024

திருப்பூர்: தனித்தேர்வர்கள் கவனத்திற்கு..!

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் தகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகின்ற 20ஆம் தேதிமுதல் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.

News March 27, 2024

உடுமலையில் நீட் தேர்வு பயிற்சி மையம் அமைப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் சாலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை அந்தந்த பாடங்களில் சிறப்பான ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2024

திருப்பூர்: நாயை அடித்துக்கொன்ற கஞ்சா ஆசாமி

image

திருப்பூர்: மதுரையைச் சேர்ந்தவர் தஸ்தகீர்(40). அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் தெருநாயை பிடித்து, பின்னங்கால்களை கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரன்பேரில் அவிநாசி போலீசார், இறந்த நாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தஸ்தகீரை கைது செய்தனர்.

News March 27, 2024

திருப்பூரில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஆணையாளர்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கடந்த முறை வாக்கு சதவீதம் குறைந்த பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் என்ற நேரில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

News March 27, 2024

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

image

திருப்பூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தும் வகையில் மாவட்டத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

News March 27, 2024

திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் சொத்து மதிப்பு

image

திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயன் மனுவில், கையிருப்பு மற்றும் வங்கியிருப்பு ரொக்கமாக 79 ஆயிரத்து 647 ரூபாய்; மனைவி கையிருப்பாக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 584 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி பெயரில் மட்டும், அசையும் சொத்தாக 5.17 லட்சம் ரூபாய்; அசையா சொத்தாக, 95.55 லட்சம் ரூபாய்க்கும், 1.50 லட்சம் அளவுக்கு நகைக்கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

News March 27, 2024

தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

image

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 27, 2024

தமாகா மாவட்ட தலைவருடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தமாக திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ரத்தினவேலை பாஜக திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர் ஜோதிஸ்வரி கந்தசாமி, உடுமலை நகர செயலாளர் கண்ணாயிரம் ஆகியோர் நேரில் சந்தித்தனர். அப்போது பொள்ளாச்சி தொகுதி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.

error: Content is protected !!