Tiruppur

News March 31, 2024

5 கிலோ கஞ்சாவுடன் வட மாநில வாலிபர்கள் கைது

image

திருப்பூர் அவிநாசி ரோடு திலகர் நகர் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக மாநகர மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு அஞ்சு கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

News March 31, 2024

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் கைது

image

சேவூர் அருகே பெரிய கண்ணூரில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ள குளத்துப் பகுதிக்குச் சென்றார். அப்போது அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் அந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அப்போது பொதுமக்கள் வினோத்தை பிடித்து காவல் நிலையத்தில் நேற்று ஒப்படைத்தனர். 

News March 31, 2024

பெண்ணை துன்புறுத்திய வழக்கில் கணவர் கைது

image

காங்கேயம் சிவன்மலையைச் சேர்ந்தவர் சிவ பாரத், பூ வியாபாரி. அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா. இருவரும் ஓராண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சிவ பரத் தன்னை அடித்து துன்புறுத்தியதாக பூர்ணிமா அளித்த புகாரில் சிவபாரத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News March 30, 2024

திருப்பூர்: விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டிய கலெக்டர்

image

திருப்பூர் மக்களவை தொகுதியில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 30) திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேருந்துகளில் ஒட்டினார்.

News March 30, 2024

திருப்பூரில் மூன்று லட்சத்தில் 100 ரூபாய் பறிமுதல்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தெற்கு சட்டப்பேரவை தொகுதி வாலிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த பிரபு என்பவரின் இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த மூன்று லட்சத்து 100 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News March 30, 2024

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டவர் வாபஸ்

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் போட்டியிட்ட சந்திரசேகர் என்பவர் இன்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். வேட்பு மனு தாக்கலுக்கு பின் கட்சி தலைமை தன்னை தொடர்பு கொள்ளவில்லை எனவும் , நாம் தமிழர் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விரும்பாததால் வாபஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

News March 30, 2024

மரத்தில் கார் மோதி விபத்து: 3 பேர் படுகாயம்

image

திருப்பூரைச் சேர்ந்தவர் ஆல்வின். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக திருப்பூரிலிருந்து சாமலாபுரம் வழியாக காரில் நேற்று (மார்ச் 29) சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது மனைவி உட்பட 4 பேர் காரில் இருந்தனர். அந்த சமயம் இரண்டு நாய்கள் காரின் குறுக்கே வந்ததால் பிரேக் பிடிக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

News March 29, 2024

திருப்பூர்: கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி கடந்த ஆறு மாத காலமாக அனைத்து விதமான அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பிஏபி ஆயக்கட்டில் பதிவு செய்யப்பட்ட ஆயகட்டுதாரர்களுக்கு தண்ணீர் வழங்காமல், தண்ணீர் திருடர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி கருப்பு கொடியை கட்டி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

News March 29, 2024

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம்

image

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 28, 2024

கணேசமூர்த்தி உடலுக்கு கனிமொழி அஞ்சலி

image

ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

error: Content is protected !!