India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடுமலை தொகுதி குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள அணிக்கடவு கிரி வீட்டில் நேற்று (ஏப்ரல் 1) மாலை 6 மணியிலிருந்து வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நேரத்தில் திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் வீட்டில் திடீரென வருமானவரித்துறை சோதனை செய்தது உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வருகின்ற ஏப்ரல் 9-ம் தேதி அம்மனுக்கு பூச்செரிதல் நிகழ்ச்சியும் நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகின்றது . 11 தேதி கம்பம் போடுதல் ,18ம் தேதி கொடியேற்றம், பூவோடு ஆரம்பம் 24ஆம் தேதி அதிகாலை மாவிளக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் 25ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது
திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் சந்தியா என்பவரை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துள்ளார். அப்பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரிந்த நிலையில் இருவரும் பிரிந்திருந்த சூழ்நிலையில் தன்னிடம் பெற்ற பணத்தை திருப்பி தராமல் வெளிநாடு சென்றதாகவும், பெண்ணை மீட்டு தனது பணத்தை பெற்று தருமாறு சந்தோஷ் எஸ்.பி அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.
திருப்பூர், காங்கயம் ரோடு புதுப்பாளையம் தனியார் பள்ளி அருகே தேர்தல் கண்காணிப்பு குழு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய தலைவர் சித்ரா என்பவரின் காரில் சோதனை நடத்தினர். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ரொக்க பணம் ரூ.80 ஆயிரத்து 200 வைத்திருந்தால் அப்பணத்தை பறிமுதல் செய்தனர்.
உடுமலைப் பகுதியில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மக்கள் வெப்பத்தை தாக்கு பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில பஸ் ஸ்டாண்ட், ரயில்வே கேட், தளி ரோடு ,தாராபுரம் சாலை பகுதிகளில் நுங்கு விற்பனை தீவிரம் அடைந்துள்ளது ஒரு நுங்கு பத்து ரூபாய்க்கும், பதநீர் ஒரு டம்ளர் 25 ரூபாய்க்கும் விற்பனை ஆனாலும் விலை ஏற்றத்தை பொருட்படுத்தாமல் மக்கள் அதிக அளவு வாங்கி செல்கின்றனர்.
கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காங்கேயம் பகுதியில் பல்லடம் முதல் வெள்ளகோவில் வரை உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இருவழிச் சாலையாக உள்ள இதை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பணி தாமதமாவதாலும், எச்சரிக்கை பலகை வைக்காததாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதன் காரணமாக மாவட்டம் முழுவதும் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காங்கேயம் சாலையில் நடைபெற்ற சோதனையின் போது செல்வக்குமார் என்பவரது நான்கு சக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் இருந்த 53,440 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் இன்று பறிமுதல் செய்தனர்.
பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூர் ஒன்றிய பகுதியில் பல்வேறு கிராமங்களில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலை பேசுகையில், கச்சத்தீவை தாரைவார்த்ததன் மூலம் நாட்டுக்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் துரோகம் செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டினார்.
உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 29) தொடங்கியது. மாவட்டத்திலிருந்து 12 அணிகள் கலந்துகொண்ட நிலையில் நேற்று (மார்ச் 31) பரபரப்பாக நடைபெற்று முடிந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
திருப்பூர் வளர்மதி பஸ் நிறுத்தம் அருகே உள்ள மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு இருந்த 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து மசாஜ் சென்டர் உரிமையாளர் கார்த்திக் மற்றும் ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.