Tiruppur

News July 24, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்குப் பருவமழை காலம் நிலவி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே மாவட்ட மக்கள் அதற்கேற்றாற்போல் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News July 23, 2024

2ஆவது நாளாக தர்ணா போராட்டம்

image

தாராபுரம் அருகே உள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ். கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவேற்றவில்லை எனக் கூறி பொதுமக்கள் மனு அளித்தனர். இந்நிலையில் தங்களுக்கு வர வேண்டிய வளர்ச்சி நிதி வரவில்லை என கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ரமேஷ் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

News July 23, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

பல்வேறு அரசுத் துறைகளை ஒருங்கிணைந்து மக்களிடம் நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நிவர்த்தி செய்யும் வகையிலான மக்களுடன் முதல்வர் திட்டம் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் இன்று சேவூர் பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் கலெக்டர் கிறிஸ்தவராஜ் நேரில் ஆய்வு செய்து, நலவாரிய உறுப்பினர் அட்டைகளை தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

News July 23, 2024

புதிதாக பணியில் சேர்வோருக்கு ஊக்கத்தொகை

image

உற்பத்தித் துறையில் புதிதாக (Freshers) பணியில் சேர்வோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு முதல் மாத சம்பளத்தை ஊக்கத்தொகையாக (நிறுவனங்கள் தரும் ஊதியம் போக) வழங்கும் என இன்றைய பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் முத்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு உற்பத்தி மையங்கள் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்ட மக்களின் வயிற்றில் பாலை வார்த்ததுபோல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News July 23, 2024

மத்திய பட்ஜெட்: திருப்பூரின் எதிர்பார்ப்பு

image

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் மேம்படும் வகையில், ரூ.15 கோடி முதலீட்டுடன் கூடிய, பிஎல்ஐ 2.0 திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டுமென திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பிஎல்ஐ திட்டத்தின் மூலமாக, ‘கிரீன் திருப்பூர்’, ‘பிராண்ட் திருப்பூர்’ என புதிய பிராண்ட்களை உருவாக்க திட்டமிட்டனர். இருப்பினும், மத்திய அரசிடம் இருந்து சரியான அறிவிப்பு இல்லை. இம்முறை அறிவிப்பு இருக்குமா?

News July 23, 2024

ஆடை தயாரிப்பு துறையில் பணியாற்ற இலவச பயிற்சி

image

நூறு சதவீத வேலைவாய்ப்புடன் நிப்ட்-டீ கல்லூரியில் ஆடை தயாரிப்பு துறையில் பணியாற்ற இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடிந்தவுடன் திறமைக்கு ஏற்ப மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை ஊதியமும், பதவி உயர்வு பெறவும் தகுந்த வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் கல்வித்தகுதி குறைந்தபட்சம் 12ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை சேரலாம். தங்குமிடம், உணவு, பாடப்புத்தகம் ஆகியவை இலவசம்.

News July 23, 2024

திருப்பூர் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உதவி மையம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உயர்கல்வியில் சேராத மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு 5 நாள்கள் கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் நடைபெற்றது. இந்நிலையில் நாளைமுதல் வரும் 28ஆம் தேதிவரை தினமும் காலை 10 முதல் மாலை 5 மணிவரை கலெக்டர் அலுவலகத்தில் உயர் கல்வி வழிகாட்டுதல் மையம் செயல்படும். கல்லூரியில் சேராத மாணவர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம் என திருப்பூர் ஆட்சியர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார்.

News July 22, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த மனுக்கள்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டமானது இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 523 மனுக்களை அளித்துள்ளனர்.

News July 22, 2024

பேச்சுப் போட்டிக்கு உடனே விண்ணப்பிக்கவும்

image

கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக இளைஞர் அணி சார்பில் ‘என் உயிரினும் மேலான’ என்னும் பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெறும் முதல் 3 நபர்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் முறையே பரிசாக வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கவும் கூடுதல் தகவல்களும் kalaignar100pechu.org என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இம்மாதம் 25ஆம் தேதி விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாகும்.

News July 22, 2024

அமராவதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறப்பு

image

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே அமராவதி பிரதான கால்வாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனிடையே பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விவசாய பயன்பாட்டிற்கு தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென பொள்ளாச்சி எம்பி ஈஸ்வர சாமியிடம் விவசாயிகளால் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காலை அமராவதி பிரதான கால்வாயில் 220 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

error: Content is protected !!