India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடக்கூடிய சுப்பராயனுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது கடந்த ஐந்து வருடத்தில் சுப்பராயன் மேற்கொண்ட பணிகள் 100 என்ற புத்தகத்தை பிரகாஷ்காரத் வெளியிட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குறிச்சி கோட்டையில் இருந்து சின்ன குமாரபாளையம் செல்லும் சாலை வழியை ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றன.இந்த நிலையில் ஆபத்தான வளைவான இடத்தில் தடுப்புச் சுவர் இல்லாத காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே இந்த பகுதியில் தடுப்புச் சுவர் மற்றும் இரவில் ஒளிரும் பட்டை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்து உள்ளனர் .
காங்கேயத்தை அடுத்த கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அகிலாண்டபுரம் பிரிவில் காங்கேயம் ஒழுங்கும் முறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த சில நாட்களாக போதை ஆசாமிகள் மது மற்றும் கஞ்சா போதையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் வளாகத்தினுள் தீ வைத்து விட்டு சென்று விடுவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில், முத்தூர், சென்னிமலை ஆகிய பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் கடந்த மூன்று நாட்களாக தபால் வாக்கு பதிவு பெறப்பட்டது. மாற்றுத்தறனாளிகள் மற்றும் 85 வயதுடைய மூத்த குடிமக்கள் உள்ள வீடுகளில் நேரில் வாக்கு சேகரிப்பு நடத்தினர். இதில் மொத்தம் 315 வாக்குகளில் நேற்று வரை கடந்த 3 நாட்களில் 305 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர்.
உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்றவழக்குகள், சொத்துமதிப்பு, கல்வித்தகுதி,வழங்கப்பட்ட குற்றத்தண்டனை போன்ற முழுதகவல்களையும் தெரிந்து கொள்ள <
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கேயம் சட்டப்பேரவை தொகுதியில் நேற்று மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் இந்திய கூட்டணியில் உள்ள கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மீது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியதாக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை நேரில் சந்தித்து சோதனைச் சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் தன்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டதாகவும் புகார் மனு அளித்தார்
திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, திருப்பூர் தொகுதியில் 293, கோவை தொகுதியில் 224, நீலகிரி தொகுதியில் 179, ஈரோடு தொகுதியில் 172, பொள்ளாச்சி தொகுதியில் 140 ஆகியவை பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளரான ஏ.பி. முருகானந்தம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பவானி அருகே அய்யம்பாளையம் மாரப்பன் பாளையம் கவுந்தப்பாடி சலங்கபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பரப்புரை மேற்கொண்டார். அப்போது கரும்பு ஏற்றி சென்ற டிராக்டரை ஓட்டி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருப்பூர் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வருகின்ற 13ஆம் தேதி அவிநாசி அருகே பலமுறை பகுதியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான மேடை அமைப்பதற்கான கால்கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் மேயர் தினேஷ்குமார் , எம்எல்ஏ செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
Sorry, no posts matched your criteria.