India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நேபாளத்தில் இந்தியா, வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் உள்ளிட்ட ஆறு நாடுகள் கலந்துகொண்ட ஆசிய அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட திருப்பூரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றனர். நேற்று திருப்பூர் திரும்பிய அவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

TNPL 2வது தகுதி சுற்றில் திருப்பூர் அணியும், திண்டுக்கல் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த திருப்பூர், 19.4 ஓவர்கள் முடிவில் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அடுத்து களமிறங்கிய திண்டுக்கல் அணி 10.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நாளை (ஆக. 4) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் கோவை அணியை எதிர் கொள்ள உள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி இன்று (ஆக.3) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி காங்கேயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் மழைப்பதிவு குறித்த உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்களை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், அந்தந்த தாலுகா அலுவலக தொலைபேசி எண்ணை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

➤திருப்பூர் மாவட்டத்தில் தீரன் சின்னமலை நினைவு தினைத்தையொட்டி நாளை ஆக.3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை. ➤கழிப்பறையில் வடமாநிலநபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த சம்பவத்திற்கு அன்புமணி ராமதாஸ் கண்டம் தெரிவித்துள்ளார். ➤காங்கேயத்தில் நாளை அரசியல் கொடி, பேனர் வைக்க போலீசார் தடை. ➤அமராவதி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதால், ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கேயம் போலீஸ் நிலையம், பேருந்து நிலைய ரவுண்டானா, டவுன் பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கொடி கட்டவோ , பிளக்ஸ், பேனர் வைக்கவோ போலீசார் தடை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பூர் காதர் பேட்டை பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிவறையில் வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருந்ததாக வீடியோ வெளியான நிலையில் அன்புமணி ராமதாஸ் இது குறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். கழிவறையில் தூய்மை தொழிலாளர்கள் தங்க வைப்பதுதான் திமுகவின் சமூகநீதியா என கேள்வி எழுப்பிய அவர் இது கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த சில வருடங்களாக பணியாற்றி வந்த கீதா கடந்த மே மாதம் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வருகை புரிந்த பாஜக மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் கூறுகையில், அமராவதி ஆற்றில் மூன்று நாட்களாக மூன்று டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது. இங்குள்ள உப்பாறு அணை காய்ந்து கிடக்கிறது. எனவே உப்பாறு அணைக்கு தண்ணீர் விடவில்லை என்றால் தண்ணீரில் இறங்கி கண்ணீர் விடுகின்ற போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

திருப்பூர், அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் தமிழ்நாடு திட்ட கமிஷன் துறையின் மூத்த உறுப்பினர் விஜயபாஸ்கர் உடன் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினருடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. திருப்பூரில் தேவைகள் மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக அரசு எந்த விதத்தில் உதவி செய்ய முடியும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.