Tiruppur

News August 6, 2024

கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்த சமூக ஆர்வலர்

image

திருப்பூர், போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் தொமுச தொழிற்சங்கத்தில் பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக அவலங்களை புகாராக அளிப்பதன் காரணமாக தனது வீட்டிற்கு அருகே தெரு நாய்களை விட்டுவிட்டு செல்வதாகவும், கழிவு நீரை அப்புறப்படுத்தாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டி கோரிக்கை மனுவை மாலையாக அணிந்து வந்து இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

News August 6, 2024

கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த 482 மனுக்கள்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 482 மனுக்களை அளித்துள்ளனர்.

News August 5, 2024

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

image

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நாளை (6.8.24) குண்டடம் ஒன்றியத்தில் ஊதியூர் பழனி பாதயாத்திரை மண்டபத்தில் செங்கோடம்பாளையம், ஆரத்தொழுவு, பெருமாள்பாளையம், புங்கந்துறை, சங்கரண்டாம்பாளையம், சிறுகிணறு ஆகிய ஊராட்சிகளுக்கும், எலையமுத்தூர் கனகாம்பாள் திருமண மண்டபத்தில் குறிச்சிக்கோட்டை, மானுப்பட்டி, சின்ன குமாரபாளையம் ஆண்டியகவுண்டனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். 

News August 5, 2024

பணி நியமன ஆணை வழங்கல்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் கலெக்டர் கிருஸ்துராஜ் மனுக்களை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து 17 மருத்துவ அலுவலர்கள் மற்றும் செவிலியர்களுக்கு பணிகளை பாராட்டி சான்றிதழையும், பணியின் போது உயிரிழந்த இரண்டு நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

News August 5, 2024

புதிய போலீஸ் கமிஷனர்: ஒரு பார்வை

image

திருப்பூர் புதிய போலீஸ் கமிஷனராக, சென்னை ஆயுதப்படை ஐ.ஜி லட்சுமி பொறுப்பேற்றார். இவர் 1997ல் குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.,யானார். விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பணியாற்றினார். நேர்மையான, துணிச்சல் மிக்க அதிகாரியான இவர், சில ஆண்டுகளுக்கு முன் சொந்தப்பணி காரணமாக விருப்ப ஓய்வு கோரிய போது அரசு தரப்பில் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் மீண்டும் பணிக்கு வந்தார்.

News August 5, 2024

திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பொறுப்பேற்பு

image

திருப்பூர் காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரவீன்குமார் அபினவ் பணியிட மாறுதல் பெற்று சென்ற நிலையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக ஆயுதப்படை ஐஜி லட்சுமி திருப்பூர் மாநகர காவல் ஆணையராக அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு லட்சுமி தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.

News August 5, 2024

திருப்பூரில் ரூ.100: விற்பனை அதிகரிப்பு

image

திருப்பூர் மாநகரின் பல்வேறு சாலையோரங்களில் தற்போது பொம்மை விற்பனை சூடு பிடித்துள்ளது. கார்ட்டூன் நட்சத்திரங்களான டோரிமான் டோரா புஜ்ஜி, குரங்கு நாய் கரடி உள்ளிட்ட பொம்மைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. பெங்களூரில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள் சாலை ஓரங்களில் 100 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்படுவதால் பொம்மைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மக்களே ஷேர் பண்ணுங்க!

News August 5, 2024

திருப்பூர் மாவட்ட மக்களே இனி இவர்தான் உங்கள் DRO

image

திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக ஜெய்பீம் கடந்த சில வருடங்களாக பணியாற்றிவந்தார். இந்த நிலையில் சென்னை அரசு விருந்தினர் இல்லத்திற்கு வரவேற்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக சென்னை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் பொது மேலாளராக இருந்த கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயலாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 5, 2024

திருப்பூரில் வடமாநில வாலிபர் மரணம்!

image

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் மூன்றாவது மாடியில் ஏராளமான வட மாநில வாலிபர்கள் தங்கி உள்ளனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் உணவு வேலைகளை முடித்து இரவு மாடிப்படி அருகில் அமர்ந்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவக்குமார் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக முதல் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 5, 2024

விண்ணப்பிக்கலாம்: திருப்பூர் கலெக்டர் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள், அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று மருத்துவ செலவின தொகை மீளப்பெறுவதற்கான விண்ணப்பத்துடன் கூடிய அசல் மருத்துவ செலவின பட்டியல்களை சம்பந்தப்பட்ட அலுவலகம் மற்றும் கருவூலம் மூலம் ஆகஸ்ட் 16ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!