India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்நாட்டில் மிகப்பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் பின்னலாடை தொழிலுக்கு போட்டி நாடான வங்கதேசத்தில் மிகப்பெரும் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பின்னலாடை ஆர்டர்கள் திருப்பூருக்கு வர உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் அரசு கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து?

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக லட்சுமி நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்றதை அடுத்து நேற்று திருப்பூர் மாநகரில் உள்ள 9 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி தெற்கு காவல் நிலையத்திற்கு ஹரிகிருஷ்ணன், வீரபாண்டி காவல் நிலையத்திற்கு சுரேஸ் உள்ளிட்ட 9 காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்காக கல்வி கடன் வழங்கப்படுகிறது. இதை முன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பில் நடக்கும்
கல்விக்கடன் முகாம் தொடர்பாக கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் துர்கா பிரசாந்த், தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகேயன், கடன் ஆலோசகர் வணங்காமுடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் 2024-25ம் நிதியாண்டில் ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின் கோழிக்குஞ்சுகள் (1 பயனாளிக்கு 40 கோழிகுஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் பெறலாம். இதனை ரூ.3200 கொடுத்து கொள்முதல் செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும். இதற்கு அருகே உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அனுக வேண்டுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர், முதலிபாளையம் சிக்கா பகுதியில் அமைந்துள்ள நிஃப்ட் டி ஆடை வடிவமைப்பு கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரை இன்று சந்தித்தனர். திருப்பூரின் வரலாறுகளை திருப்பூர் மாநகரின் சுவர்களில் ஓவியமாக வரைந்து அழகுப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆலோசனை மேற்கொண்டனர்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் இன்று இரவு 7 மணிவரை இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனராக லட்சுமி நேற்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

திருப்பூர் மங்கலம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதில் சந்தேகமடைந்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட 1.1 குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பொருட்களை பறிமுதல் செய்து மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கைத்தறி தினத்தை முன்னிட்டு நாளை (ஆகஸ்ட் 7) சிறப்பு கைத்தறி கண்காட்சி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இச்சிறப்பு கண்காட்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் கலந்துகொண்டு, பல்வேறு பொருட்களை காட்சிப்படுத்த உள்ளனர். 20 சதவீத தள்ளுபடியும் உள்ளது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

திருப்பூர் தெற்கு வட்டம் அலகுமலை அழகாபுரி அம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட 16.84 ஏக்கர் மற்றும் முத்துக்குமார பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பாத்தியப்பட்ட இருவேறு இடங்களில் மொத்தமாக ரூ.100 கோடி மதிப்பிலான 4.71 என 21.59 ஏக்கர் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலத்தை அதிகாரிகள் மீட்டனர்.
Sorry, no posts matched your criteria.