Tiruppur

News August 13, 2024

திருப்பூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த கனமழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கும் எனவும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது. எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மக்களே ஷேர் பண்ணுங்க!

News August 13, 2024

திருப்பூரில் வேலைவாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க

image

திருப்பூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள மாவட்ட கலெக்டர் வளாகம், 4வது தளத்தில் அறை எண் 439 ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறாலம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News August 13, 2024

கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் பல்வேறு அரசுத்துறை சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News August 12, 2024

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 492 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர் மனுதாரர்கள் முன்னிலையில் துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்தார்.

News August 12, 2024

அதிக நாள்கள் வேலைக்கு வருவோருக்கு பரிசுகள்

image

பின்னலாடைக்கு பெயர் பெற்ற திருப்பூரில் அதிகமான நாட்கள் வேலைக்கு வருவோருக்கு பரிசு வழங்கப்படும் என்ற போஸ்டர் வைரல் ஆகி வருகிறது. ஓவர்லாக், பேட்லாக்-கு தற்போது வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ஆட்கள் வேண்டி போஸ்ட், நோட்டீஸ் கொடுத்து ஆட்களை வேலைக்கு எடுக்கின்றனர். அந்தவகையில், வேலைக்கு அதிக நாள் வரும் நபர்களுக்கு பிரிட்ஜ், பீரோ முதலிய பரிசு வழங்கப்படும் என்பது கவனம் பெற்றுள்ளது.

News August 12, 2024

கேரளாவுக்கு பள்ளி மாணவிகள் நிதி உதவி

image

திருப்பூர் திருக்குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் நபிஷா. இவர் வாவிபாளையம் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதுபோல அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் மாணவி அபிக்ஷா (6). இவர்கள் இருவரும் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய முடிவு செய்தனர். இதற்காக உண்டியலில் சேர்த்த பணத்தை கலெக்டர் கிறிஸ்துராஜிடம் இன்று வழங்கினர்.

News August 12, 2024

மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

image

திருப்பூர், அவிநாசியை அடுத்த சேவூர் கரியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் முறியாண்டிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நண்பர்களுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தோட்டத்திற்கு வேலி அமைத்துள்ள கம்பியை கையில் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கௌதம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News August 12, 2024

திருப்பூரில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு

image

திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது ஒரே மகன் பிரதீஷ்(5). இவர் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News August 12, 2024

திருப்பூரில் 4 ம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி முகாம்

image

திருப்பூர், கடந்த 2024 ஆம் கல்வி ஆண்டு +2 தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் வகையில் முகாம் நடைபெறுகிறது. கல்லூரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டுதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் 4ம்கட்ட முகாம் கலெக்டர் அலுவலகத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

திருப்பூரில் இன்று தொடங்குகிறது 

image

திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்தில் இன்று( 12.8.24) அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தில் சேயூர் சிவசக்தி மஹாலில் கருமாபாளையம், வேட்டுவபாளையம், முறியாண்டாம்பாளையம் மற்றும் புஞ்சை தாமரைக்குளம் ஆகிய ஊராட்சிகளுக்கு மக்களுடன் முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!