India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையால் கடந்த சில நாள்களாக திருப்பூர், தாராபுரம் உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 21 தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்ட தங்களுக்கு தேவையான தகுதி உடைய நபர்களை தேர்வு செய்தனர். இதில் வேலை தேடும் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சுதந்திர தினத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தினால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள்
88 நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் தொழிலாளர்களை பணி அமர்த்திய 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

தாராபுரம் பைபாஸ் சாலையில் உள்ள அமராவதி ஆற்றுப்பாலத்தின் கீழ் நேற்று குளிக்கச் சென்ற ஆறு மாணவர்களில் 5 மாணவர்கள் தண்ணீரில் இருந்து வெளியே வந்தனர். ஒரு மாணவன் மட்டும் நீரில் மூழ்கினார். இதை அடுத்து தீயணைப்பு துறையினர் தீவிரமாக இரண்டாவது நாளாக தேடி வந்த நிலையில் உயிரிழந்த மாணவனின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

திருப்பூர் மக்களின் 60 ஆண்டுகால கனவான ‘அத்திக்கடவு – அவினாசி நீர் செறிவூட்டும் திட்டம்’ நனவாகப் போகிறது. இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்துவைக்கிறார். 2019இல் இத்திட்டத்திற்கு அப்போதைய முதல்வர் இபிஎஸ் ரூ.1,652 கோடி ஒதுக்கி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ஆட்சி மாறிய நிலையில் நாளை தொடங்கப்பட உள்ள நிலையில் இத்திட்டத்திற்கு ரூ.1,916 கோடி செலவிடப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே, தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ளவர்கள் இம்முகாமில் பங்கேற்று பயனடையலாம். மக்களே ஷேர் பண்ணுங்க!

திருப்பூர், தாராபுரம் புறவழிச்சாலை பகுதியில் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற 16வயது சிறுவன் மாயம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுதியள்ளது. இன்று விடுமுறை தினம் என்பதால் அங்குள்ள பள்ளி மாணவர்கள் 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அதில் ஒரு மாணவன் மாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுரியில் சுதந்திர தின விழா இன்று (வியாழக்கிழமை) நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தேசியகொடி ஏற்றினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
இதன் பின்னர் தியாகிகள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.
மேலும், ரூ.3 கோடியே 5 லட்சம் மதிப்பில் 84 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை இன்று நாம் கொண்டாடி வருகின்றோம். சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற தியாகிகளின் தியாகத்தால் நாம் இன்று சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். திருப்பூரில் இருந்து சுதந்திரப் போராட்டத்திற்காக பங்கு பெற்று உயிர் தியாகம் செய்த வீரர்களின் படங்கள் திருப்பூர் குமரன் நினைவகத்தில் மக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பெண் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் 15 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில் நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு அணைத்து கிராமங்களில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கேயம் ஒன்றியத்தில் உள்ள 15 கிராம ஊராட்சிகளுக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.