India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வேலம்பட்டி சுங்கச்சாவடி முன்பு
2வது நாளாக விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. இன்று மதியம் 1 மணிக்குள் சுங்கச்சாவடி கட்டடத்தை மாவட்ட நிர்வாகம் இடித்து அகற்றவில்லை என்றால் கிராம மக்கள், விவசாயிகள், வேலம்பட்டி சுங்கச்சாவடி எதிர்ப்பு இயக்கத்தினர் தீக்குளிப்பு போராட்டம் அறிவித்துள்ளனர். ஏதும் அசம்பாவிதம் ஏற்படாதவண்ணம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை வேலம்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் தற்காலிகமாக அப்புறப்படுத்தும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நிரந்தரமாக அப்புறப்படுத்தும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நேற்று
நில அளவைத் துறையை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம் அறிவித்திருந்த நிலையில், உடுமலை வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தலைமை நில அளவையர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டுள்ளது.

திருப்பூர் ராஜா ராவ் வீதியில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் வளாகத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் இன்று (04.09.2024) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட சுகாதார அலுவலர் மரு.முரளிசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

திருப்பூர் அவிநாசி அருகே உள்ள ஐ.கே.எப்.ஏ. வளாகத்தில் 51வது இந்திய சர்வதேச பின்னலாடை கண்காட்சியை தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இன்று தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தென் பிராந்திய தலைவர் சக்திவேல், ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 6ம் தேதி வரை கண்காட்சி நடக்கிறது.

திருப்பூர் தாராபுரம் ரோடு அரண்மனை புதூர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடத்திய விஜயபுரத்தை சேர்ந்த ஸ்ரீ ரம்யா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதேபோல் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆகாஷ் குமார் இவரை கத்தியால் குத்திய வழக்கில் பாண்டியராஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடுமலை நகரம், பழனி பாதை, தங்கம்மால் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம் ஆர் வேலூர், கணபதிபாளையம், வெனசுப்பட்டி , தொட்டம்பட்டி, ஏரிபாளையம் ,புக்குளம் குறுஞ்சேரி, சின்ன வீரம்பட்டி, காந்திநகர், காந்திநகர் 2,சிந்துநகர் , ஸ்ரீராம் நகர், ஜீவா நகர் அரசு கலைக் கல்லூரி பகுதி, போடிபட்டி,
பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சி கோட்டை ஆகிய பகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி (காலை 9 மணி மாலை 4 மணி) மின்தடை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாமிநாதன் என்பவர் கடந்த 2022 ஆம் ஆண்டு 14 வயது மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட இவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 4 சக்கர வாகனங்கள் 4 மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 14 உட்பட மொத்தம் 26 வாகனங்கள் வருகிற 10 ஆம் தேதி காலை 10 மணியளவில் அவிநாசி மடத்துப்பாளையம் ரோடு, சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள திருப்பூர் மதுவிலக்கு அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.