India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூரில் ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கை நாளை 11ஆம் தேதி திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இதில் 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மற்றும் 9, 10, 11, 12 தேர்வில் தவறியவர்களும், கல்லூரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு 97908-38912 என்ற எண்ணை அழைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ், தலைமையில் நடைபெற்றது. இதில் 367 மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினார்.

காங்கேயம் எல்லப்பாளையத்தில் விவசாயம் செய்துவருபவர் பழனிசாமி (70). இவரது மகள் அம்பிகாவுடைய கணவர் ராஜ்குமார். படியூர் அருகே ஹாலோபிளாக் கம்பெனி நடத்திவருகின்றனர். குடும்ப தகராறின் காரணமாக மாமனாரை இன்று 5 முறை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு ராஜ்குமார் படியூர் சென்று தன்னைத்தானே நெத்தியில் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் திருப்பூர் மாவட்டத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நாளைய தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட உள்ளது. இதற்காக 1500 போலீசார் சிறப்பு கமாண்டர் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக மாநகர போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலூர் ராம் நகரைச் சேர்ந்தவர் கே.ஜி.பழனிசாமி (75), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் நேற்று பல்லடம் வடுகபாளையம் சென்றுவிட்டு கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ராம் நகர் செல்ல வீட்டுக்கு மொபட்டில் திரும்பியுள்ளார். கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். சிகிச்சை பலனின்றி தனது ஐம்பதாவது திருமண நாளில் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெருமாநல்லூர் அருகே வள்ளிபுரம் வணங்காமுடியனூரில் ஆதி குன்னத்தூர் மகா பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் தெலங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் குல தெய்வ கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்துடன் வந்தார். அவரை பா.ஜனதா கட்சியினர் சால்வை அணிவித்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிக்க திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு செய்தி வெளியிட்டுள்ளார். விண்ணப்பப் படிவம் மற்றும் நிலையான வழிகாட்டுதல்களை www.skilltraining.tn.gov.in- என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் திருப்பூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்து செப்-18க்குள் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் காலேஜ் ரோடு வசந்தம் நகரை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.13,000 பணம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 வட மாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மடத்துக்குளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையிலான போலீசார், செங்கம் பழனி புதூர் பஸ் நிறுத்தம் பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த வட மாநில வாலிபரை நேற்று கைது செய்தனர்.

தாராபுரம் டவுன் குளத்து புஞ்சை தெரு பாப்பம்மாள் திருமண மண்டபம் அருகே வசித்து வருபவர் செந்தில்குமார் (வயது 54 ). இவர் தனியார் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி(வயது48). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் செடிகளுக்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் போது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
Sorry, no posts matched your criteria.