India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவையிலிருந்து பீஹார் மாநிலம், பாருணிக்கு , வரும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்.23) சிறப்பு ரயில் (06059) இயக்கபடவுள்ளது. இந்த ரயில், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது. அதன்படி, கோவையிலிருந்து (ஏப்ரல்.23) காலை 11.50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் (ஏப்ரல்.24) மதியம் 2.30 மணிக்கு பாருணி சென்றடையும்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு நேற்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு நிறைவடைந்து வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்ட அறைக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் அரசியல் கட்சியினர் முன்னிலையில் சீல் வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றைய தினம் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் 1745 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற நிறைவடைந்துள்ளது. ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள வாக்கு என்னும் மையமான எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டு வைப்பறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழா வருகின்ற 21ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் முன்னோட்டமாக நேற்றைய தினம் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் காலை கற்பகவிருட்சம் பூஜையும் அதனைத் தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மாலை உற்சவர்கள் யானை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றைய தினம் காலை ஆறு மணி முதல் நடைபெற்றது. தொடர்ந்து 6:00 மணிக்கு உள்ளாக வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 72.02% வாக்குப்பதிவு நடைபெற்றதாக தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதி தென்னம்பாளையம் அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார் கியப்பனவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை 6 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் மையங்களை திமுக நகர கழக செயலாளர் முருகானந்தம் ஆய்வுமேற்கொண்டார். மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகிறதா என வாக்குச்சாவடி முகவர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த படியூர் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. இவரது தாத்தா சின்னகுமாரன் வயது 55. இவர் இரவு காங்கேயம் படியூர் நோக்கி அரசு பேருந்தில் பயணம் செய்து படியூர் பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதமாக சிவன் மலை கோவிலுக்கு சொந்தமான வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்தார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது செய்தியின் தலைப்பையோ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.
மக்களவைத் தேர்தல் நாளை 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டோர் (ம) மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என கோவை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து செல்லலாம்.
Sorry, no posts matched your criteria.