Tiruppur

News September 17, 2024

திருப்பூரில் 1152 மது பாட்டில்கள் பறிமுதல்

image

திருப்பூர் மாநகரம் மதுவிலக்கு போலீசார் நேற்று மங்களம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு ஆட்டோவில் முறைகேடாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த, 1152 மது பாட்டில்கள் மற்றும் 92 பீர் பாட்டில்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், இதனை கொண்டு வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு, கருப்பு மற்றும் பாபு ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

News September 16, 2024

வெள்ளகோவில்: தெரு நாய்களுக்கு கருத்தடை

image

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான வார்டுகளில் வெறிநாய் தொல்லை அதிகரிப்பதாக, பொதுமக்களிடம் இருந்து தொடர்ந்து புகார் வந்தது. இந்நிலையில் வெள்ளகோவில் நகராட்சி மற்றும் தங்கம் டிரஸ்ட் சார்பில் வெறிநாய்கள் பிடிக்கப்பட்டு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யும் பணிகள் இன்று துவங்கியது.

News September 16, 2024

வங்கியில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு மாநில இணை பொதுச்செயலாளர் சரவணன் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் “பொங்கலூரில் உள்ள ஒரு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைக்கிற நகைகளை போலியாக மாற்றி பல்வேறு மோசடிகளை செய்து வருகிறார்கள். எனவே, நகைகளை மோசடி செய்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

News September 16, 2024

அரசு தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

image

குரூப் 2 முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்பு வருகிற 18ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 94990-55944 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து

image

திருப்பூர், நெருப்பெரிச்சல் ஜிஎன் கார்டன் பகுதியில் முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான பின்னலாடை நிறுவனத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது. வடக்கு தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட லாரிகளில் தண்ணீர் கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். திருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 16, 2024

சுய தொழில் தொடங்க மானியம் அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சுய தொழில் தொடங்க 50,000 மானியத் தொகை வழங்கப்படுகிறது. வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தேவையான ஆவணங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேரில் வழங்கலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News September 15, 2024

திருப்பூர் கோவிலில் தரிசனம் செய்த அமைச்சர்

image

திருப்பூர் ஸ்ரீபுரம் அவிநாசி சாலை ராக்கியாபாளையம் பகுதியில் ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் ஜகன் மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா நாளை காலை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று நடைபெற்ற யாகசாலை பூஜையில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

News September 15, 2024

கல்யாண ராணியின் தோழி தமிழ்செல்வி கைது

image

திருப்பூர், தாராபுரம் பகுதியில் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்த கல்யாண ராணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய சத்யாவுக்கு ஆதரவாக திருமண மோசடியில் தோழியாக செயல்பட்ட தமிழ்ச்செல்வி இதுவரை தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் தலைமறைவாக இருந்த தமிழ்செல்வியை இன்று அனைத்து மகளிர் போலீசார் கரூரில் கைது செய்தனர்.

News September 15, 2024

திருப்பூர்: ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

image

பல்லடத்தை அடுத்துள்ள அறிவொளிநகர் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை கடந்த 2 நாட்களாக உடல் நலக்குறைவால் (காய்ச்சல்) பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 15, 2024

ஓடும் ரயிலில் செல்போன் திருடிய இருவர் கைது

image

கோவையில் இருந்து சென்னை செல்லக்கூடிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று பள்ளி ஆசிரியர் மகேந்திரன் என்பவர் பயணித்துள்ளார். அந்த ரயில் திருப்பூர் வந்தபோது, ஜன்னல் வழியே அவரது செல்போனை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பைக்குந்தா மற்றும் சந்தனு சக்ரியர் ஆகியோரை நேற்று கைது செய்து செல்போனை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!