India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழைக்காய் ஏலம் நேற்று நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 4, 250 கிலோ வாழைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், நேந்திரன் வாழைக்காய் முதல் தரம் கிலோ ரூ.24 முதல் ரூ.27 வரையில் ஏலம் போனது .ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.82 ஆயிரம் என்று விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மாரடைப்பு காரணமாக அவர் இன்று காலை காலமானார். இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை வட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் துவங்கி நடைபெற்று வருகிறது. இன்று ஆங்கில பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், 31 ஆயிரத்து 87 பேர் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் 419 பேர் தேர்வு எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு அளித்தவர்களுக்கான பரிசீலனை இன்று நடைபெற்றது. மொத்தம் 38 வேட்பு மனுக்கள் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 15 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும் , பல்வேறு காரணங்களுக்காக 23 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருப்பூர் மாநகர காவல் துறையின் KVR நகர் சரகத்தின் சார்பில் சரக காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையில் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கேவிஆர் நகர் காவல் நிலையம் முன்பு துவங்கிய கொடி அணி வகுப்பு செல்லம் நகர், பழ குடோன், கருவம்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் காவல்துறை மற்றும் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் சார்பாக கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது. நேற்றைய தினம் மாலை 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 38 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாவட்டத் தேர்தல் அலுவலர் (திருப்பூர் கலெக்டர்) தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் தகுதி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் தொடக்கக்கல்வி பட்டய தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வருகின்ற 20ஆம் தேதிமுதல் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வருகின்ற ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்து உள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு திருப்பூர் சாலையில் உள்ள ஆர் கே ஆர் குரு வித்யா மேல்நிலைப்பள்ளி நீட் தேர்வு பயிற்சி மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை அந்தந்த பாடங்களில் சிறப்பான ஆசிரியர்கள் வாயிலாக பயிற்சி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: மதுரையைச் சேர்ந்தவர் தஸ்தகீர்(40). அவிநாசி, வேலாயுதம்பாளையத்தில், நேற்று முன்தினம், கஞ்சா போதையில் தெருநாயை பிடித்து, பின்னங்கால்களை கட்டி, கட்டையால் கடுமையாக தாக்கினார். இதில் நாய் பரிதாபமாக உயிரிழந்தது. இது தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்த புகாரன்பேரில் அவிநாசி போலீசார், இறந்த நாயின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, தஸ்தகீரை கைது செய்தனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கடந்த முறை வாக்கு சதவீதம் குறைந்த பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் என்ற நேரில் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Sorry, no posts matched your criteria.