India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோவை நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இதற்கு முன் இருந்த எம்பி யாரும் பார்த்ததில்லை. கோவை தொகுதியில் உரிமைகளை கேட்டு பெற வலிமையான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என பேசினார்.
பிஎஸ்என்எல் சார்பில் திருப்பூரில் புதன்கிழமை (மார்ச் 27) மெகா மேளா நடைபெறுகிறது. மேலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு பிஎஸ்என்எல் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் பிரதான தொலைபேசி நிலையத்தில் புதன்கிழமை மெகா மேளா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்ட உள்ளன.
திருப்பூர் ரயில் நிலையத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் ரயில்வே போலீசாருடன் இணைந்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பயணிகளின் உடைமைகளைத் தீவிரமாகச் சோதனை செய்யும் போலீசார் பணம், பரிசுப் பொருள்களை எடுத்துச் சென்றால் அதனை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த ச.எல்சி என்பவர் சுயேட்சையாக இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே உடுமலை சட்டமன்ற தொகுதிக்கும், 1996 , 2001, 2006 ஆண்டுகளில் உடுமலை நகர மன்ற தலைவருக்கும் போட்டியிட்டுள்ளார். மேலும், இவர் மக்கள் நீதி மய்யம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் குரு என்பவரின் தாயார் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இன்று சாலை விபத்து ஏற்பட்டது. அங்கு இருந்த பயணிகள் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். மற்றொரு பெண் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த ஏ பி முருகானந்தம் சட்டை அணியாமல் உள்பணியன் அணிந்தவாறு வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தற்போதைய எம்பி சுப்பராயன் போட்டியிடுகிறார். அவர் இன்று (மார்ச் 25) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, வேட்புமனு தாக்கல் மார்ச் 20இல் தொடங்கிய நிலையில் மார்ச் 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில், இன்று (மார்ச் 25) திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, காங். உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொங்கலூர் அருகே பெருந்தொழுவிலிருந்து சாலையில் கிராவல் மண் கடத்தப்படுவதாக அவிநாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் அனுமதியின்றி 4 யூனிட் கிராவல் மண் ஏற்றிக்கொண்டு வந்த லாரியை மடக்கிப் பிடித்தனர். அந்த கிராவல் மண் கடத்திய கோவிந்தராஜ் நாச்சிமுத்து மற்றும் செல்ல குட்டி ஆகிய மூன்று பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று விசாரணை நடத்தினர்.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள சுப்பராயன் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் தயாரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பூர் ராஜாராம் வீதியில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான செல்வராஜ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.