Tiruppur

News April 10, 2024

திருப்பூர் அருகே திமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சோமவாரபட்டி ஊராட்சியில் 9-வது வார்டு உறுப்பினர் சாரதா மணி தலைமையில் 80 பேரும், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் உமா மகேஸ்வரி ஏற்பாட்டில் 20க்கும் மேற்பட்டோர் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். உடன் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News April 10, 2024

திருப்பூர் அருகே அதிமுகவுக்கு ஆதரவு

image

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் சக்திவேல் இன்று முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்களை இன்று நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அதிமுக வேட்பாளருக்கு பரப்புரையில் ஈடுபட போவதாக அறிவித்தார். உடன் நகரத் தலைவர் ஈஸ்வரன், செல்வராஜ், சுந்தரலிங்க சுவாமிகள் ஆகியோர் இருந்தனர்.

News April 10, 2024

திருப்பூரில் ரம்ஜான் பண்டிகை: சிறப்பு தொழுகை

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாத நடைபெற்று வருவதை முன்னிட்டு நேற்று இரவு பிறை தெரிந்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு மற்றும் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் பண்டிகை என அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள மைதானத்தில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

News April 10, 2024

திருப்பூரில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 8 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி இன்று துவங்கியது. ராயபுரத்தில் நடைபெற்று வரும் இந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News April 10, 2024

நாளை ரம்ஜான்: பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ரம்ஜான் பிறை தென்பட்டதால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை காலை 8 மணிக்கு இறைச்சி மஸ்தான் நகர் பகுதியில் உள்ளீர் ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற உள்ளது. இதற்காக பல் இந்த பள்ளிவாசலில் சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

News April 10, 2024

திருப்பூர் அருகே 2 தரகர்கள் கைது

image

காங்கேயம் திருவிக நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த சபரி விஜய், கணேஷ் ஆகிய இரண்டு பேர் வாடகைக்கு குடிவந்துள்ளனர். குடி வந்த நாட்களில் இருந்து அந்த வீட்டிற்கு அடிக்கடி பெண்கள் மற்றும் ஆண்கள் வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விசாரணையில் பாலியல் தொழில் தரகர்களான அவர்கள் இருவரை போலீசார் நேற்று கைதுசெய்தனர்.

News April 10, 2024

மலை கிராம பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது

image

திருப்பூர் மாவட்டம்
உடுமலை அருகே குருமலை மலை கிராமத்தில் நேற்று நாகம்மாள் என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது அப்போது சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி பல கிலோமீட்டர் சுமந்து எரிசனம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தனர் இந்த நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது .
தாய் நாகம்மாளும் குழந்தையும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News April 9, 2024

திருப்பூர்: கோர விபத்து ! 4 பேர் படுகாயம்

image

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் இன்று (ஏப்ரல்.9) பாண்டிச்சேரியில் இருந்து கேரளா நோக்கிச் சென்ற கார், ஒரு வழி பாதையில் எதிரே வந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த நஜீம் (35) ஜாஸ்மின்(30), இஜா(5),
மற்றும் இஹான் (2) ஆகிய நான்கு பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு கோவை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

News April 9, 2024

பல்லடத்தில் நான்கு பேர் வெட்டி கொலை 15 ஆம் தேதி தீர்ப்பு

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி கள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை முடிந்தது. வருகின்ற 15ஆம் தேதி திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டது.

News April 9, 2024

திருப்பூர் அருகே சாலை விபத்தில் 5 பேர் பலி

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் காரும் அரசுப் பேருந்தும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சந்திரசேகர், சித்ரா, இளவரசன், அரிவித்ரா, குழந்தை சாக்சி ஆகியோர் இறந்தனர். மேலும் ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சந்திரசேகர் தம்பதியினர் 60வது திருமண நாளுக்காக திருக்கடையூர் சென்று திரும்பியபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!