Tiruppur

News October 18, 2024

உடுமலையில் கும்பாபிஷேக விழா

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமணலிங்க நாடார் வீதியில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை புனரமைப்பு செய்து கும்பாபிஷேக விழா நடத்துவது என பொதுமக்கள் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சில மாதங்களாக வர்ணம் பூசி சொல்லிட்டு பணிகள் நடைபெற்ற பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 21ஆம் தேதி திங்கட்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகின்றது என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

பொதுவிநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நாளை(19.10.24) நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு (ம) மாற்றம் செய்தல் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். எனவே திருப்பூர் மக்களே மிஸ் பண்ணிடாமா SHARE பண்ணுங்க.

News October 18, 2024

பல்லடம் பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தேர்வு

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கான Under 18 பிரிவு கால்பந்துப் போட்டியில், பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் முதலிடம் பெற்று, மாநில போட்டிகளுக்கு தேர்வு பெற்றுள்ளனர். இந்நிலையில் முதலிடம் பிடித்த மாணவர்களை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

News October 17, 2024

அமராவதி ஆற்றில் வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு 

image

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள காளிபாளையம் பகுதியில் சேர்ந்தவர் நந்தகுமார் (27). இவர் தனியார் உணவக டெலிவரி வேலை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர் இன்று மதியம் 2 மணி அளவில் தனது நண்பர்களுடன் அமராவதி ஆற்றில் குளிக்க சென்றபோது, நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 17, 2024

திருப்பூரில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

image

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:  தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (18.10.24) காலை 10.30 மணிக்கு திருப்பூர் பல்லடம் சாலையில் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்தில் 4வது தளத்தில் அறை எண் 439ல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கூறியிருந்தார்.

News October 17, 2024

TNPSC தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிஎன்பிசி குருப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் அக்.18ஆம் தேதி(நாளை) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதிரி தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் முதன்மை தேர்வு நடைபெறும் வரை தொடர்ந்து மாதிரித் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு 9499055944 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 16, 2024

கூடுதல் விலைக்கு உரம் விற்றால் உரிமம் ரத்து

image

திருப்பூர், உடுமலையில் உரங்களின் விலை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி மாவட்ட அளவிலான உர கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு செய்து வருகின்றனர் நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால் உரக்கட்டுப்பாட்டு விதிமுறை செயலாகும் எனவே கூடுதல் விலைக்கு உரம் விற்பனையாளர்கள் யாராவது உரங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வேளாண் அதிகாரி தெரிவித்தார். 

News October 16, 2024

12 கடைகளுக்கு ரூ.17ஆயிரம் அபராதம்

image

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில், கொங்கு மெயின் ரோட்டில் அமைந்துள்ள உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் இன்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது உணவு பாதுகாப்பு மற்றும் தர உரிமம் சட்டத்தை மீறிய 12 கடைகளுக்கு அபராதமாக ரூ.17 ஆயிரம் விதிக்கப்பட்டது. 
மேலும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

News October 16, 2024

தீவன பெருக்க திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

image

திருப்பூர், உடுமலையில் நடப்பாண்டில் தீவன பெருக்க திட்டத்தில் மாடுகளில் பால் உற்பத்தி திறன் மற்றும் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முதலமைச்சர் உத்தரவுபடி தீவன பெருக்கு திட்டம் நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. எனவே தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவர் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளக்கபடும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

News October 16, 2024

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நியமனம்

image

திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) இருந்த பக்தவச்லம் கரூர் மாவட்டத்திற்கும், தாராபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஜெகதீசன் திருவண்ணாமலைக்கு இடமாற்றப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் மணக்கடவு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிமுத்து பதவி உயர்வு அடிப்படையில் திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக இடைநிலை நியமிக்கப்பட்டுள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

error: Content is protected !!