Tiruppur

News April 27, 2024

திருப்பூர் : வாகனங்களுக்கு அபராதம்

image

திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிக பாரம் ஏற்றி வரும் மாநிலங்கள் குறித்து போக்குவரத்து காவல்துறையினர் தீவிர சோதனைகள் ஈடுபட்டு வருகின்றனர். சாலை விபத்துக்களை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் திருப்பூர் பல்லடம் சாலையில் போக்குவரத்து காவல்துறையினர் அதிக பாரம் ஏற்றி வந்த வாகனங்களுக்கு இன்று அதிரடியாக அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

News April 27, 2024

செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கு தடுப்பூசி

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளின் உயிர்காக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடை சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாம் சுற்று தடுப்பூசி போடப்படுகிறது. ஏப்ரல் 29ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு தடுப்பூசி போடப்படும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

கையாடல் செய்த மேலாளர் கைது

image

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் பொறுப்பாளராக ஷேக் உசேன்(38) என்பவர் அவிநாசி காவல் நிலையத்தில் நேற்று புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் ஆனந்தன்(29) என்பவர் தனது அலுவலகத்திலிருந்து 1.75 லட்சத்தை கையால்டல் செய்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் அவிநாசி போலீசார் ஆனந்தனை கைது செய்தனர்.

News April 27, 2024

கோடைகால பயிற்சி – அறிவிப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைகால பயிற்சி முகாம் 15 நாட்கள் நடத்தப்பட உள்ளது. சிறந்த பயிற்றுநர்களை கொண்டு தடகளம் கூடைப்பந்து ஆகிய பயிற்சிகள் வருகின்ற 29ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது என திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிருஷ்ணராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.

News April 27, 2024

தடுப்புச் சுவரில் மோதி 2 பேர் பலி

image

தாராபுரம் அருகே உள்ள சின்னக்காம்பாளையம் பிரிவு என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த கூலித் தொழிலாளிகள் கார்த்திகேயன் மற்றும் வடிவேல் இருவரும் எதிர்பாராதமாக சாலை தடுப்பில் மோதி நேற்று படுகாயம் அடைந்தனர். சிகிச்சை பெற்று வந்த கூலித் தொழிலாளிகள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News April 26, 2024

திருப்பூரின் அமைதியான பஞ்சலிங்க அருவி!!

image

உடுமலைப்பேட்டை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இவ்விடம் தியானம், நீர்வீழ்ச்சி, கோவில் மற்றும் திருமூர்த்தி அணைக்கு பிரபலமானது. நவம்பர் முதல் ஜூன் மாதம் வரை அருவில் நீர் அதிகரித்து செழிப்பாக காணப்படுவதால் சுற்றுலாவிற்கு இதுவே ஏற்ற காலம். இந்த அருவி 5மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. நெல்வயல்கள், சூரியகாந்தி தோட்டங்களுடன் அழகு செரிந்து இவ்வருவி காணப்படுகிறது.

News April 26, 2024

நிலைக்கு வந்த மாரியம்மன் கோவில் தேர்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. நேற்று மாலை 3:45 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் நேற்று இரவு 9 :30 மணி அளவில் கோவில் பகுதியை அடைந்தது .இந்த வருடம் மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியதால் 5 மணி நேரம் கழித்து தேர் நிலையை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

News April 25, 2024

மழலைப் பள்ளிகளை இயக்க வேண்டாம்: ஆட்சியர் அறிக்கை

image

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்தவராஜ் என்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளார். கோடை வெயில் முடியும் வரை மழலை பள்ளிகளை இயக்க வேண்டாம் எனவும், 100 நாள் பணியின் போது முதியவர்கள் நண்பகல் 12 மணிக்கு மேல் வேலை செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

News April 25, 2024

குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திரா பிரியதர்ஷினி, நித்யா, சுபாஷினி ஆகிய 3 பெண் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் நடந்த குரூப்-1 தேர்வில் நித்யா உதவி ஆட்சியராகவும், இந்திரா பிரியதர்ஷினி வணிக வரித்துறையில் உதவி ஆணையராகவும், சுபாஷினி கூட்டுறவுத்துறையில் துணைப் பதிவாளராகவும் தேர்வாகியுள்ளனர். அவர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

News April 25, 2024

உடுமலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

image

உடுமலையில் புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது. பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் பாலப்பம்பட்டியில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்ல வேண்டும். இதே போல திருப்பூர் செஞ்சேரிமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எரிப்பாளையம் சர்வீஸ் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வந்து பழனி தேசிய நெடுஞ்சாலை இணையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!