Tiruppur

News May 17, 2024

திருப்பூர் அருகே தேசிய டெங்கு தினம் அனுசரிப்பு

image

வெள்ளகோவிலில் அரசு மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தேசிய டெங்கு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தனியார் நூற்பாலை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார்.

News May 16, 2024

மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் உறுதிமொழி

image

தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் தலைமையில் முதலாவது மண்டல மகப்பேறு மருத்துவமனையில் சமூகத்துடன் இணைந்த டெங்குவை கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்ட மலேரியா அலுவலர் முத்துவேல், மாநகர நல அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

News May 16, 2024

லாரி மீது ஆட்டோ மோதி மூன்று பேர் படுகாயம்

image

காங்கேயம் -சென்னிமலை சாலையில் தாராபுரத்திற்கு செல்ல சரக்கு ஆட்டோ சென்றுள்ளது. அப்போது வாய்க்கால் மேடு பகுதியில் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் இன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 16, 2024

சாலையில் சுற்றித்திரியும் நாய்களால் அச்சம்

image

திருப்பூர் மாநகரம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 16, 2024

வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

image

திருப்பூர், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் நெட் பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு நடந்தது. இத்தேர்வில், கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் சஜிஷ்னு பங்கேற்றார். தேசிய அளவில் 2 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 28வது இடமும், ஓ.பி.சி., என்.சி.எல். பிரிவில் 4ம் பெற்று, சாதனை படைத்தவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News May 15, 2024

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

image

முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு தொகுதியின் நீண்டகால பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ செல்வராஜ் கோரிக்கைகள் வைத்திருந்தார். அதைதொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் சார்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக எம்எல்ஏ செல்வராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

திருப்பூர் மழைப்பொழிவு விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உடுமலைப்பேட்டையில் 6 செ.மீட்டரும், திருப்பூர் PWD பகுதியில் 3 செ.மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 2 செ.மீட்டரும், மடத்துக்குளம் பகுதியில் 1செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 15, 2024

திருப்பூரில் வட மாநில வாலிபர் குத்திக்கொலை

image

திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் செல்போனை கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். செல்போனை தர மறுத்ததால் ஆகாஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.

News May 15, 2024

ஆங்கில வழி பிரிவை சேர்க்க கோரி முதல்வருக்கு மனு

image

உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில மொழி கலைப்பிரிவு அட்மிஷன் மறுக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பொதுமக்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கும் கல்வித்துறை அமைச்சருக்கும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பிரிவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என இன்று மனு அனுப்பியுள்ளனர்.

News May 15, 2024

அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

image

திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு கடந்த 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி (அ) எஸ்எஸ்எல்சி, கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு பொறியியல் மேம்பட்ட தொழில் நுட்ப படிப்புகளுக்கான இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர்ந்து பெறலாம் என அரசினர் தொழில்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்தார்.

error: Content is protected !!