India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பகுதிகளில் ஆதார் இணைக்கப்பட்டு மக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு இருந்தது. ரேஷன் கடையில் கைரேகை பதிவு கார்டுதாரின் உண்மை தன்மை பதிவு செய்யப்பட்டு உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 810 ரேஷன் கடைகளுக்கு வரும் 13ஆம் தேதி கண் கருவிழிப்பதிவு செய்து உணவு பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பூர் லிங்கேகவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30), பனியன் நிறுவனத் தொழிலாளி. 2018ஆம் ஆண்டு செல்போன் பேசியபடி நடந்து சென்றபோது மர்ம நபர்கள் அவரது செல்போனை பறித்துச் சென்றனர். இந்த வழக்கு தொடர்பாக அருணாச்சலம் (20) மற்றும் விஜயராம் (21) ஆகியோரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் ஜாமீனில் வெளியே வந்த இருவரும் தலைமறைவான நிலையில் நேற்று போலீசார் கைது செய்தனர்.
உடுமலை அரசு மருத்துவமனை பிரசவ வார்டு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விளக்குகள் கடந்து சில தினங்களாகவே பகலில் எரிந்து வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் தலைமை மருத்துவரிடம் தெரிவித்தும் விளக்குகள் அணைக்கப்படவில்லை. அலட்சியம் காட்டாமல் ஊழியர்கள் சரியான நேரத்தில் விளக்குகளை அணைக்க வேண்டும் பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது; வெள்ளகோவில் நகராட்சியில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான குடிநீர் இணைப்புகள் உள்ளன. முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெள்ளகோவிலில் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர். மொடக்குறிச்சி, கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (37). இவரிடம் வெள்ளகோவில், தாசவநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.30 லட்சம் மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரில் ஹரிஹரனை வெள்ளகோவில் போலீசார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் பல்வேறு பகுதிகளில் புதிய ரேஷன் கார்டுகளுக்கு 9,900 விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யாமல் தேங்கியுள்ளது. தற்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாததாக உள்ளது. பல்வேறு நலத்திட்டங்கள் பெறுவதற்கு கார்டு தேவைப்படுகிறது. எனவே புதிய ரேஷன் கார்டுகளை விரைந்து வழங்க பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு இன்று மனு அனுப்பி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசு மதுபான கடை, பஸ் ஸ்டாண்ட் வணிக நிறுவனங்கள் கோவில் பள்ளியில் என மக்கள் நெரிசல் மிகுந்த பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள அரசு மதுபான கடையை மே 5ஆம் தேதிக்குள் இடமாற்றம் செய்யப்படவில்லை என்றால் 18ஆம் தேதி வியாபாரிகள் சங்கம் சார்பில் கடைகள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என வியாபாரிகள் சங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் கட்டுகளை ஏற்றி சென்ற லாரியில் மின் கம்பி உரசிகதால் திடீரென தீ விபத்து இன்று ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் வைக்கோல் மற்றும் லாரி என பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் தீயில் எரிந்து சேதமானது. இது குறித்து குண்டடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த வெப்ப அலையால், இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் தங்களை வெயிலிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உடுமலை மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த நிலையில் பொள்ளாச்சியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று கோவை
எஸ்பி பத்ரி நாராயணன் ஆய்வு செய்தார். உடன் தேர்தல் நடத்தும் அலுவலர் சர்மிளா, அதிகாரிகள், திமுக, அதிமுக, பாஜக கட்சியின் முகவர்கள் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.