India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கண்டறியப்பட்ட 80 கடைகளும் பூட்டப்பட்டது. கடைகளுக்கு ரூ.21 லட்சத்து 25 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தெரிவித்துள்ளார். புகையிலை பொருட்கள் விற்கப்பட்டால் 9444042322 என்ற வாட்சப் எண்ணில் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தினார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு (கியாஸ்) நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டமானது வருகிற 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் (அறை எண் 20ல்) நடக்கிறது. இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர் சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கி பேசினார். மேலும் பள்ளி கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். விரைவாக அனைத்து பணிகளையும் முடிக்கவும் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக அலுவலக நாட்களில் அலுவலக பணி நேரத்தில் புகார்களை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களில் பதிவு செய்யலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் திருப்பூர் மாவட்டத்தில் 572.50 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் அதிகபட்சமாக திருப்பூர் வடக்கு பகுதியில் 73 மில்லி மீட்டர், தெற்கு பகுதியில் 27 மில்லி மீட்டரும், உடுமலைப்பேட்டையில் 60 மில்லி மீட்டர் என மழை பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மத்திய கிழக்கு வங்க கடல், அதையொட்டிய வடக்கு அந்தமானில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அது மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது. இந்த தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அருகே அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் தற்போது அணை நீர்மட்டம் 85. 24 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் பிரதான மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதால் கரையோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

உடுமலை அருகே பெதம்பம்பட்டி என் வி மெட்ரிக் பள்ளி மாணவி மிர்துளா மகாராஷ்டிராவில் நடைபெறும் ஜூனியர் பிரிவு மாணவிகளுக்கானகால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு தேனியில் நடைப்பெற்ற தேர்வு போட்டியில் வெற்றி பெற்றார். மாணவிக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம் பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

திருப்பூர்,பாண்டியன் நகர் பகுதி வார்டு எண்:2, சத்யா நகரில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட நியாய விலைக் கடையினை, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே. சுப்பராயன் MP மற்றும் மேயர் தினேஷ்குமார் கலந்து கொண்டு நேற்று திறந்து வைத்தனர். உடன்மண்டல தலைவர் கோவிந்தராஜ் , மாமன்ற உறுப்பினர் மாலதி கேபிள் ராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட கணபதிபாளையம், தப்பிரெட்டிப்பாளையம், ரங்கம்பாளையம், சாவடிப்பாளையம், புதூர், நாம்கரம் பாளையம் போன்ற ஊர்களில் இன்று அதிகாலை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து மின்சார வாரியமும், பொதுப்பணி துறையும் மழை நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மழையின் காரணமாக பாதுகாப்பு நடவடிக்கையாக மின்சார வாரியம் மின் இணைப்பை துண்டித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.