Tiruppur

News May 4, 2024

திருப்பூர்: சவுக்கு சங்கரை அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

image

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தேனியில் இருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இன்று கைது செய்து கோவை அழைத்து வந்தனர். கோவை நோக்கி வந்து கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில் சவுக்கு சங்கர் அழைத்துவரப்பட்ட வாகனம் விபத்துக்குள்ளானது. காயமடைந்த சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News May 4, 2024

திருப்பூர்: புது மாப்பிள்ளை விஷம் தின்று தற்கொலை

image

திருப்பூர் ராக்கியாபாளையம் பாலாஜி நகரை சேர்ந்தவர் கோபி (37), டிரைவர். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு கோபிக்கு திருமணம் நடைபெற்றது. ஆனால் கடந்த 4 மாதங்களாக கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். இதனால் விரக்தி அடைந்த கோபி விஷம் தின்று நேற்று தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News May 4, 2024

திருப்பூர் அருகே வாகனங்கள் செல்ல முடியாத நிலை

image

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி கடந்த பல மாதங்களாக நடைபெற்றுவருகிறது. இதுவரை இந்த இரு வழிச்சாலையை தற்போது நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த நெடுஞ்சாலை ஓரங்களில் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது. எனவே காங்கேயம் கரூர் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

News May 3, 2024

காங்கேயத்தில் புத்தகத் திருவிழா

image

காங்கேயம் நகரத்தில் நகர ரோட்டரி சங்கம் சார்பில் நடைபெறும் 9ஆம் ஆண்டு புத்தக திருவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக செயலாளர் பத்மநாபன் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர கழக செயலாளர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

News May 3, 2024

அமராவதி முதலைப் பண்ணை

image

திருப்பூாில் அமைந்துள்ளது அமராவதி முதலைப் பண்ணை இந்தியாவின் மிகப்பொிய முதலைகள் பாதுகாப்பு பண்ணையாகும். அமராவதி நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புற வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன. பல வளா்ந்த முதலைகள் இங்கிருந்து நீா்த்தேக்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்பொழுது இங்கே 98 முதலைகள் வளா்க்கப்பட்டு பராமாிக்கப்பட்டு வருகின்றன.

News May 3, 2024

திருப்பூரில் கூடுதல் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு

image

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி மகளிர் கலை கல்லூரியில் வைக்கப்பட்ட கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 256 கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜ் முன்னிலையில் கூடுதலாக 8 கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News May 3, 2024

கோடை வெயிலை சமாளிக்க திருப்பூரில் புதிய முயற்சி

image

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சிக்னலில் இருக்கும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிக்னலில் பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 3, 2024

வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பல்

image

சுமார் 387 ஏக்கர் வெக்டர் பரப்பளவு கொண்ட காங்கேயம் அருகே உள்ள ஊதியூர் மலைப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மான் வகைகள், குரங்குகள், முயல்கள், சிறுத்தை மற்றும் பலவகை அரிய உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன. கடும் வறட்சியை காரணமாக வனவிலங்கு நடமாட்டம் அதிகரித்துள்ள ஒரு சில இடங்களில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

News May 2, 2024

திருப்பூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று (மே.02) மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர். தமிழகத்தில் ஆங்காங்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட்-உம் முதன்முதலாக விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 2, 2024

திருப்பூரில் உண்ணாவிரத போராட்டம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை உரிய அனுமதி இல்லாமலும், அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமலும் செயல்பட்டு வருவதாகவும் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!