Tiruppur

News October 31, 2024

வெடி விபத்து ஏற்பட்டால் செய்ய வேண்டியவை

image

பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏதேனும் ஏற்பட்டால் முதலுதவியாக காயம்பட்ட நபரை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்துச் சென்று காயம் ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த நீரை ஊற்றலாம். மேலும், பருத்தி துணியை நனைத்து காயம்பட்ட இடத்தை மூடலாம். பெரிய அளவில் காயம் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவரை அணுகவும். மருத்துவர் பரிந்துரையின்றி தாங்களாகவே ஏதும் செய்ய வேண்டாம்.

News October 31, 2024

தீபாவளி: மக்களே கவனமா கொண்டாடுங்க!

image

தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் பட்டாசுகளை வெடிக்கும்போது கவனம் தேவை. பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். மேலும், கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட திருப்பூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துகள்!

News October 30, 2024

தாராபுரம் அருகே பள்ளத்தில் இறங்கிய கார்

image

தாராபுரம் அடுத்து உள்ள குள்ளாய் பாளையம் அருகே சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் இருந்து தீபாவளி விடுமுறைக்காக காரில் சொந்த ஊருக்கு அழைத்து சென்று கொண்டிருந்த போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தில் இருந்த மரத்தில் மோதிநின்றது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை நீண்ட போராட்டத்திற்கு பின் கார் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டது.

News October 30, 2024

அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைவு

image

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக திருப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் இன்று மதியம் வரை செயல்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றதால் திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்தது.

News October 30, 2024

திருப்பூர்: விடியல் பயணத்தில் பெண்ணுக்கு அபராதம்

image

பல்லடம் தெற்கு பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவர் அரசு மகளிர் இலவச பேருந்தில் பயணம் செய்துள்ளார். இவருக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கும் முன்பே டிக்கெட் பரிசோதகர் பேருந்து ஏறி இவருக்கு ரூ200 அபராதம் விதித்தனர். இந்த விவகாரம் தொடர்பான செய்தி வெளியான நிலையில் போக்குவரத்து கழகத்தினர் அவரிடம் அபராதத்தை திருப்பிக் கொடுக்க முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பான ஆடியோ வெளியாகி உள்ளது.

News October 29, 2024

திருப்பூரில் இன்றைய தலைப்பு செய்திகள்

image

➤பல்லடத்தைச் சேர்ந்த பென் ஒருவர் பேருந்தில் மகளிர் இலவச பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணித்ததால், ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. ➤ திருப்பூரில் இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்தம் 23,82,820பேர் உள்ளனர். ➤திருப்பூரில் பயிர்களுக்கு காப்பீடு செய்ய கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். ➤ திருமூர்த்தி அணை பகுதியில் பெய்து வரும் மழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

News October 29, 2024

திருப்பூரில் மொத்தம் 23 லட்சத்து 82 ஆயிரம் வாக்காளர்!

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் வரைவு பட்டியலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் இன்று வெளியிட்டார். இதில்1 1,68,197 ஆண் வாக்காளர்களும், 12,14,266 பெண் வாக்காளர்களும், 357 திருநங்கைகள் வாக்காளர்களும் என 23,82,820 வாக்காளர் உள்ளதாக ஆட்சியர் கிருஸ்துராஜ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

News October 29, 2024

மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு பாராட்டு

image

திருப்பூர், உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு மெக்கானிக் மோட்டார் வாகனம் தொழிற்பிரிவில் மாணவர் இசாக் அகமது தொழிற்பயிற்சி படிப்புக்கான தேர்வில் மொத்தமாக 1200க்கு 1168 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். சென்னையில் நடந்த விழாவில் அமைச்சர் கணேசன் மாணவருக்கு சான்றிதழ் வழங்கினர். மேலும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

News October 29, 2024

பயிர்களுக்கு காப்பீடு செய்ய திருப்பூர் ஆட்சியர் அழைப்பு

image

திருப்பூர் மாவட்டம் பகுதியில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் 2024- 2025ஆம் ஆண்டு சிறப்பு பருவம் நெல் (2 ) மற்றும் ராகி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநர் அல்லது வேளாண்மை அதிகாரிகள் மற்றும் உதவி வேளாண்மை அதிகாரிகளை அணுகலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 29, 2024

தேசிய அளவிலான ஸ்கேட்டிங்: தங்கம் வென்ற திருப்பூர் மாணவி

image

கர்நாடக மாநிலத்தில் தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள ‘ஸ்மார்ட் மாடர்ன்’ பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவி அபர்ணா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மாணவியை பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள், மாணவியை பாராட்டினர்.

error: Content is protected !!