Tiruppur

News May 25, 2024

அறங்காவலர் குழுவுடன் எம்எல்ஏ ஆலோசனை

image

திருப்பூரில் பிரசித்தி பெற்ற ஈஸ்வரன் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் நடந்தது. தொடர்ந்து தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் இன்று கோவிலில் அறங்காவலர் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டார். நடந்து முடிந்த விழா பற்றியும், கோவிலில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் பணியாளர்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

News May 25, 2024

திருப்பூரிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

திருப்பூரில் வார விடுமுறையை முன்னிட்டு இன்றும் நாளையும் 40 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். வெளியூர், பிற மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வஸ்துக்காக 40 சிறப்பு பேருந்துகள் திருப்பூர் மண்டலத்தில் இருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்துகள் கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்தும், மத்திய பஸ் நிலையத்தில் இருந்தும் என 40 பஸ்கள் இயக்கப்படுகிறது.

News May 25, 2024

உடல் உறுப்பு தானம் செய்த பெண்ணின் உடலுக்கு டீன் அஞ்சலி

image

திருப்பூர், வீரபாண்டியை சேர்ந்த சுடர்க்கொடி (36) என்ற பெண் விபத்தில் சிக்கி, தலையில் படுகாயமடைந்த நிலையில் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. சுடர்க்கொடியின் சடலத்துக்கு, மருத்துவமனை டீன் முருகேசன், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த ஒட்டுமொத்த மருத்துவ அதிகாரிகளும், ஊழியர்களும் அணிவகுத்து நின்று, நேற்று அஞ்சலி செலுத்தினர்.

News May 24, 2024

திருப்பூரில் மழைக்கு வாய்ப்பு

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

திருப்பூர்: கல்வி உரிமை சட்டத்தின்கீழ் 4120 விண்ணப்பம்

image

திருப்பூர் மாவட்டத்தில் 281 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இப்பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தின் 8 தாலுகாவில் மொத்தம் 4120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி தெரிவித்தார்.

News May 24, 2024

விண்ணப்பிக்க இன்றே கடைசி: மாவட்ட நிர்வாகம் தகவல்

image

அரசு கலை கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள, 164 அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே, 5ம் தேதி துவங்கியது. 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடு இன்று (மே 24) வரை நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

News May 24, 2024

திருப்பூர் மாவட்டத்தில் சராசரியாக மழை எவ்வளவு?

image

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரையிலான 24 மணி நேரத்தில், சராசரியாக 17.50 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச அளவாக, அவிநாசியில், 103 மிமீக்கு கனமழை பெய்துள்ளது. பல்லடம் தாலுகா அலுவலக சுற்றுப் பகுதிகளில் 57 மிமீ மழையும், திருப்பூர் – அவிநாசி ரோட்டிலுள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 34 மிமீ மழை பதிவானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News May 24, 2024

தமிழக கேரள எல்லையில் மே 26ஆம் தேதி முற்றுகை

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றில் வட்டவடாவில் கேரளா அரசு தற்போது தடுப்பணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அதை தடுத்து நிறுத்த நாளை மறுநாள் (மே 26) காலை 10 மணிக்கு சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

News May 24, 2024

நொய்யலில் தூர்வாரும் பணி: ஆணையாளர் ஆய்வு

image

கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் வழக்கமாகச் செல்லும் தண்ணீரைவிட அதிக அளவு செல்கிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

News May 23, 2024

தேர் ரத வீதிகளில் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

image

திருப்பூர் அரிசி கடைவீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ரதம் வரும் வீதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை இன்று மாநகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!