India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் அவிநாசியப்பர் கோயில் கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். சுந்தரர் பாடல் பெற்ற இத்தலம் பல புராணக் கதைகளைத் தாங்கி நிற்கிறது. அவினாசியப்பருக்கு வலது புறம் அம்பாளின் கோயில் உள்ளது இது பொதுவாக மற்ற கோயில்களில் இல்லாத சிறப்பு ஆகும். இங்கு 63 நாயன்மார்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், நடராசர் மண்டபத்தில் ஐம்பொன்னால் ஆன நடராசர் சிலையும் இருப்பது சிறப்பானதாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வள்ளியரச்சல் கிராம பகுதிகளில் திமுக கட்சி நிர்வாகிகளிடம், பொதுமக்களின் கோரிக்கை மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து தமிழக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் திமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் கடந்த இரண்டு நாட்களாக மாவட்ட அளவிலான கபடி போட்டிகள் நடந்து வந்தன. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்துகொண்டு விளையாடின.
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் நத்தக்காடையூர் கேஜிஐ கல்லூரி அணி முதலிடமும், அணைப்பதி ஐகே அணி 2ம் இடமும், அங்கேரிபாளையம் 7 பிரதர்ஸ் அணி 3ம் இடமும் பிடித்தன.
பொங்கலூர் அருகே தெற்கு அவினாசிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (23). தொங்குட்டிபாளையம் ஊராட்சி கரட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்துரு (22). இவர்கள் இருவரும் நேற்று கொடுவாயிலிருந்து அவினாசிபாளையத்திற்கு கியாஸ் சிலிண்டர் எடுப்பதற்காக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பைக் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவரும் நேற்று உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர் 2024-25ம் கல்வி ஆண்டில் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் கல்லூரியில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெற்று பயனடையலாம். விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அறை எண்.523, முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர், திருப்பூர் 641604 என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என நேற்று கலெக்டர் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சியில் நகர மன்ற தலைவராக பாப்பு கண்ணன் உள்ளார். இவர் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை இல்லாதவர்களுக்கு உடனடியாக வீட்டுமனை வழங்க வலியுறுத்தி கோரிக்கை மனுவை நேற்று மாவட்ட ஆட்சியர் கிறிஸ்தவராஜிடம் வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டுதல் குழு குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது பிளஸ் டூ தேர்ச்சி பெறாத 23 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு செல்ல வேண்டும். மேலும் பிளஸ் டூ முடித்த அனைவரையும் உயர்கல்வியில் சேர உயர்கல்வி வழிகாட்டு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
திருப்பூரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு அவிநாசி காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் விளைவித்த பல்வேறு வகையான காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நிலையில் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து பீன்ஸ் ஒரு கிலோ 200 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதிய வேளையில் லேசான மழை பெய்தது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தில் பதிவான மழை அளவு பின்வருமாறு, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் உலகத்தில் ஐந்து புள்ளி என்பது மில்லி மீட்டர் மழையும், தெற்குப் பகுதியில் ஒரு மில்லி மீட்டர் மழையும், பல்லடத்தில் 3.20 மில்லி மீட்டர் மழையும், மூலனூரில் 4 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வைத்திருப்பவர்கள் மற்றும் சொத்தின் உரிமையாளர்கள் 2024 -2025ம் ஆண்டிற்கான முதல் மற்றும் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்து வரியினை செலுத்தினால், சொத்து வரியில் உடனடியாக 5 சதவீதம் தள்ளுபடியை ஊக்கத்தொகையாக பெற்றுக்கொள்ளலாம் என திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.