India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருப்பூர் மக்களே.., போலியான வாட்ஸ்ஆப் எண்களில் இருந்து ’Traffic Fine’ என மெசேஜ் வந்தால் ஏமாற் வேண்டாம். உங்களிடம் போலி ஆப்-ஐ பதிவிறக்க செய்து வங்கி விவரங்களை திருடும் மோசடி நடைபெறுகிறது. ஆகையால், அபராத விவரங்களை சரிபார்க்க https://echallan.parivahan.gov.in இணையதளத்தையே பயன்படுத்துமாறு சைபர் குற்றப்பிரிவு போலீசார் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் சரக உதவி காவல் ஆணையர் ஜான் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் மற்றும் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ரிதன்யா (27 வயது) வரதட்சணை மரண விவகாரத்தில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் தற்போது ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் குறிப்புகளை அனுப்பியது வெளியானது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் மக்களே.., அவசர காலத்தில் உதவும் எண்கள்:
1)தீயணைப்புத் துறை – 101
2)ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108
3)போக்குவரத்து காவலர் -103
4)பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091
5)ரயில்வே விபத்து அவசர சேவை – 1072
6)சாலை விபத்து அவசர சேவை – 1073
7)பேரிடர் கால உதவி – 1077
8)குழந்தைகள் பாதுகாப்பு – 1098
9)சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930
10)மின்சாரத்துறை – 1912. (SHARE IT)

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரக் கூடிய நிலையில் சொந்த ஊர் செல்பவர்கள் மற்றும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குபவர்களால் திருப்பூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் வகையிலும் விபத்துக்களை குறைக்கும் வகையில் திருப்பூர் மாநகரப் போலீசார் சார்பில் நாளை(அக்.16) முதல் போக்குவரத்து மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

1) திருப்பூரில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.( SHARE IT)

திருப்பூரில் வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்திலேயே இலவச ‘CNC Machine operator’ பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு வேலை வாய்ப்பும் உறுதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 காலியிடங்கள் உள்ளன. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <

திருப்பூர்: இடுவம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வங்கதேசத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட நிஷா அக்தர் என்ற பெண் உட்பட 3 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.