Tiruppur

News July 6, 2025

B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் இங்கே <>க்ளிக் செய்து<<>>, வரும் ஜூலை 21-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை வழங்கப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு கோவை (ம) சேலத்தில் நடைபெற உள்ளது. இத்தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News July 6, 2025

ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

திருப்பூரைச் சேர்ந்த பெண் தனது கணவருடன் முன்பதிவு செய்யபடாத டிக்கெட் எடுத்து, அவசரத்திற்கு AC கோச்சில் ஏரியுள்ளனர். அங்கு வந்த TTR, பெண்ணின் கணவரை ஒரு பெட்டியில் இருக்க வைத்து விட்டு, அப்பெண்ணை வேறு பெட்டிக்கு அழைத்து சென்றார். அப்போது, அங்கு பாலியல் அத்துமீறலீல் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அப்பெண் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், TTR பாரதியை கைது செய்தனர்.

News July 6, 2025

திருப்பூர் மாவட்ட குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மாற்றம்

image

தமிழகம் முழுவதும் நீதிபதிகள், துணை நீதிபதிகள் நிலையில் உள்ளவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக இருந்த மோகனவள்ளி, திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை சிவில் கோர்ட்டு 26-வது உதவி நீதிபதியான விக்னேஷ் மது, திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News July 5, 2025

திருப்பூர் இரவு ரோந்து காவலர் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 05.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், பல்லடம், உடுமலை, தாராபுரம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News July 5, 2025

திருப்பூரில் வேலை வாய்ப்பு!

image

திருப்பூரில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Filed Marketing Executive பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வரை வழங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

News July 5, 2025

காங்கேயம் அருகே ஒருவருக்கு டெங்கு காய்ச்சல்

image

சிவன்மலை ஊராட்சிக்குட்பட்ட பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் மகேஸ்குமார்(40) என்பவருக்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது டெங்கு காய்ச்சல் பாதித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதனால் அக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

News July 5, 2025

TNPSC குரூப்.4 மாதிரி தேர்வு

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பாக அரசு பணியாளர் தேர்வாணையும் நடத்தும் குரூப்.4 தேர்விற்கான இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டவர்களுக்கான மாதிரி தேர்வு இன்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

News July 5, 2025

வங்கியில் வேலை! நல்ல சம்பளம்

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் காலியாக உள்ள உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.48,000 முதல் ரூ.85,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு தேர்வு மையம் கோவை, சேலம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் அமைக்கப்படும். <>விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்<<>>. கடைசி நாள் 24.7.25 ஆகும்.

News July 5, 2025

வங்கி வேலைக்கு தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை

image

உள்ளூர் வங்கி அதிகாரியாக பணியில் சேர டிகிரி, சிஏ முடித்தவர்கள் தகுதியுள்ளவர்கள். விண்ணப்பதாரர்கள் அந்தந்த மாநில மொழியை பேச, எழுத கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.bankofbaroda.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.850 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் (ம) முன்னாள் ராணுவத்தினர் ரூ.175 கட்டணம் ஆகும்.

News July 5, 2025

வீரராகவ பெருமாள் கோயிலுக்கு போங்க!

image

திருப்பூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் வீர ராகவரை வணங்கினால் சகல பிரச்சனைகளும் நீங்குமாம். ஏனுங்க, உங்களுக்கு கடன் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தால் இந்த சனிக்கிழமை வீரராகவரை வணங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குங்கள். அப்படி செய்தால் பிரச்சனை நீங்குமாம். ஏனுங்க உடனே கடன் பிரச்சனையில் சிக்கியுள்ளவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!