India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வாரச்சந்தை திங்கட்கிழமைதோறும் நடைபெறுகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை காலை முதல் இரவு வரை சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் செயல்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று(மே 13) 2 மணி அளவில் சாரல் மழை பெய்யத் துவங்கியது. இந்த மழை காரணமாக வார சந்தையில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனால் வியாபாரம் மிகவும் மந்தமாக நடைபெற்றது.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு10 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் பிரச்சனையால் திருப்பூர் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் சாமுண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற வாலிபர் சிலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. கடன் தந்தவர்கள் நெருக்கடியால் இன்று விஜயமங்கலம், ஊத்துக்குளி இரும்புப் பாதையில் ரயில் முன் பாய்ந்து சுரேஷ் இன்று தற்கொலை செய்து கொண்டார்.
குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இரவு 7 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலையை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலையில் மாற்றம் தென்பட்டது. சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து பரிசோதனை செய்ததில் 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை செய்ததில் 9 பேர் அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் 9 பேரை போக்சோவில் நேற்றிரவு கைது செய்தனர்.
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முதல் தெற்கு போலீஸ் நிலையம் வரையிலான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதனால் தாராபுரம் சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் டி சி ஒன் பாயிண்ட், எம் ஜி பி ஷோரூம் வழியாகவும், காங்கேயத்திலிருந்து பழைய பஸ் நிலையம் வரும் வாகனங்கள் ராஜீவ் நகர் மற்றும் எம் ஜி பி ஷோரும் வழியாக மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ளது அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பரந்த நீர்த்தேக்க அமராவதி அணை. 1957ஆம் ஆண்டு காமராஜரால் இவ்வணை கட்டப்பட்டது. இந்த அணை, வேளாண்மைக்காகவும், வெள்ளத்தின் போது நீரைக் கட்டுப்படுத்துவதற்காகவும் கட்டப்பட்டது. மேலும், இது ஒரு மீன்பிடித் தலமாகவும் இருக்கிறது. மேலும், சேற்று முதலைகள், மக்கர் முதலைகள் பிடிக்கப்படாமல், இயற்கையாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் மாவட்டம்
உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் கோயமுத்தூர் அணியும் பெரிய குளம் அணியும் மோதிய போட்டியில் கோயமுத்தூர் யுனைடெட் அணி கோப்பையை கைப்பற்றியது .பரிசுகளை திமுக நகர செயலாளர் வேலுச்சாமி, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் பலர் வழங்கினர்.
சென்னையில் தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த உடற்பயிற்சி நிலையம் திருப்பூரில் தங்களது கிளையை நேற்று திறந்தது. இதனை நடிகர் பரத் மற்றும் மாநிலத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி மைய தினேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர்; எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் ஆறு சாய ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நோட்டீஸ் அளித்துள்ளனர். எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு பணிகளை, செய்து வரும் நிறுவனம் சுத்திகரிப்புக்கான தொகையை வழங்காமல், நிலுவை வைத்துள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனம், விளக்கம் அளிக்க அதிகாரிகள் நோட்டீஸ் நேற்று அளித்தனர்.
Sorry, no posts matched your criteria.