Tiruppur

News May 15, 2024

திருப்பூர்: 5 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் ஐந்து அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி நேற்று பெற்றது. சூரியம்பாளையம் எஸ் முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் 18 மாணவர்கள், 13 மாணவிகள் என 31 பேர் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அதேபோன்று புது ராமகிருஷ்ணாபுரம் நகரவை மேல்நிலைப் பள்ளியில் 152 மாணவர்கள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

News May 15, 2024

கணினி அறிவியலில் 351 பேர் நூற்றுக்கு 100 மதிப்பெண்

image

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் பாடவாரியாக நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றவர்கள் விவரம்: தமிழ் பாடத்தில் 7 பேரும், இயற்பியலில் 66 பேரும், வேதியியலில் 76 பேரும், கணக்கில் 57 பேரும், வேளாண்மை அறிவியல் பாடத்தில் 39 பேரும், ஆடிட்டிங் பிரிவில் 28 பேரும் என மொத்தம் 351 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து நேற்று சாதனை படைத்துள்ளனர்.

News May 15, 2024

காலை உணவு திட்டம் மூலமாக 72,000 மாணவர்கள் பயன்

image

தமிழ்நாட்டில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலமாக காலை உணவு வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் மூலமாக நேற்று வரை 1081 பள்ளிகளில் படிக்கும் 89 மாணவ மாணவிகள் பயன் பெற்று வருகின்றனர்.

News May 14, 2024

அவிநாசி அருகே கிணற்றில் மிதந்த சடலம்

image

அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் கானாங்குளம் வையாபுரி கவுண்டன் தோட்டத்தை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பரமசிவம் ( 47). இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக கனவன் மனைவி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரமசிவத்தை யாரும் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. இன்று அவர் அருகே உள்ள கிணற்றில் சடலமாக மிதந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 14, 2024

திருப்பூர் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை திருப்பூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

திருப்பூர்: அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 3ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 92.06% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 88.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 95.26 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

News May 14, 2024

+1 RESULT: திருப்பூர் 95.23% தேர்ச்சி!

image

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சென்னை மாவட்டத்தில் மாணவர்கள் 93.10% பேரும், மாணவியர் 97.07% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 95.23% தேர்ச்சி பெற்று திருப்பூர் 3ஆவது இடத்தை பெற்றுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 14, 2024

உடுமலை பாலியல் விவகாரம்: தற்கொலைக்கு முயன்ற சிறுவன்!

image

உடுமலையில் 14 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை கூர் நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட 15 வயது சிறுவன் சோப் ஆயில் குடித்து தற்கொலைக்கு இன்று(மே 14) முயன்ற நிலையில், சிறுவனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News May 14, 2024

உடுமலை: மேலும் ஒரு சிறுமி பாதிப்பு!

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் பாலியல் தொந்தரவு செய்த நிலையில், மகளிர் காவல் துறையினர் மே 12ம் தேதி இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில் மேலும் ஒரு 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 14, 2024

300 கிலோ மாம்பழம் அழிப்பு

image

திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் மாம்பழம் மற்றும் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள் குடோன்களில் ஆய்வு செய்து வருகின்றனர். இதில், திருப்பூரில் 102 கடைகளில் ஆய்வு செய்து 12 கடைகளில் விதிமுறைகளை கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று செயற்கை முறையில் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.

error: Content is protected !!