India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
காங்கேயம் -சென்னிமலை சாலையில் தாராபுரத்திற்கு செல்ல சரக்கு ஆட்டோ சென்றுள்ளது. அப்போது வாய்க்கால் மேடு பகுதியில் எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் இன்று படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாநகரம் முழுவதும் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளன. வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பாதசாரிகள் ஆகியோர் அச்சத்துடனே செல்லும் நிலை தொடர்கிறது. தினமும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர், நிப்ட்-டீ ஆடை வடிவமைப்பு கல்லுாரியில், தேசிய ஆடை வடிவமைப்பு மற்றும் நெட் பேஷன் டெக்னாலஜி நுழைவுத்தேர்வு நடந்தது. இத்தேர்வில், கிட்ஸ் கிளப் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் சஜிஷ்னு பங்கேற்றார். தேசிய அளவில் 2 லட்சம் பேர் எழுதிய தேர்வில், 28வது இடமும், ஓ.பி.சி., என்.சி.எல். பிரிவில் 4ம் பெற்று, சாதனை படைத்தவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருப்பூர் தெற்கு தொகுதியின் நீண்டகால பிரச்சனைகள் குறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு எம்.எல்.ஏ செல்வராஜ் கோரிக்கைகள் வைத்திருந்தார். அதைதொடர்ந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ரூ.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மக்கள் சார்பாக, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக எம்எல்ஏ செல்வராஜ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (மே.14) பெய்த மழையின் அளவை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, உடுமலைப்பேட்டையில் 6 செ.மீட்டரும், திருப்பூர் PWD பகுதியில் 3 செ.மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 2 செ.மீட்டரும், மடத்துக்குளம் பகுதியில் 1செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார். இவர் நேற்று இரவு பணி முடிந்து தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரின் செல்போனை கேட்டு மிரட்டப்பட்டுள்ளார். செல்போனை தர மறுத்ததால் ஆகாஷ் குமாரை கத்தியால் குத்தியுள்ளனர். இதில் சிகிச்சை பெற்று வந்தவர் இன்று காலை உயிரிழந்தார்.
உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 ஆங்கில மொழி கலைப்பிரிவு அட்மிஷன் மறுக்கப்படுவதால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. எனவே பொதுமக்கள் தரப்பில் தமிழக முதல்வருக்கும் கல்வித்துறை அமைச்சருக்கும் பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி பிரிவில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என இன்று மனு அனுப்பியுள்ளனர்.
திருப்பூர், தாராபுரம், உடுமலையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்வதற்கு கடந்த 10ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி (அ) எஸ்எஸ்எல்சி, கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு பொறியியல் மேம்பட்ட தொழில் நுட்ப படிப்புகளுக்கான இண்டஸ்ட்ரி 4.0 மற்றும் பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் சேர்ந்து பெறலாம் என அரசினர் தொழில்பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்தார்.
தமிழக அரசு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கி கௌரவித்துவருகிறது. இந்த ஆண்டுக்கான சிறப்பாக தொழில்புரிந்து வரும் தொழில்முனைவோர்கள் விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 90 அரசு மற்றும் பள்ளியைச் சேர்ந்த 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதன்படி நான்கு அரசு பள்ளிகள், ஒன்று நகரவை பள்ளி, ஒன்று பகுதி பெரும் பள்ளி, 75 மெட்ரிக் பள்ளிகள், ஒன்பது சுய நிதி பள்ளிகள் என 90 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.
Sorry, no posts matched your criteria.