India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்திற்கு இன்று (மே.21) மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான கிராமப் பகுதிகளில் குட்டைகள் உடைந்து ஊருக்குள் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக திருப்பூரில் 100 கமாண்டோ வீரர்களுடன் தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
திருப்பூர்-ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக இது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் இன்று காலை நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண்களுக்கான இலவச குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நாளை (மே 22) நடைபெறுகிறது. கத்தியின்றி ரத்தமின்றி தழும்பின்றி 10 நிமிடத்தில் செய்யப்படும் இந்த அறுவை சிகிச்சையால் பக்க விளைவுகளோ, இல்லற இன்பம் மற்றும் உடல் உழைப்புக்கு பாதகமோ என எவ்வித பாதிப்பும் இல்லை. மேலும் இந்த சிகிச்சை செய்து கொள்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3100 வரை வழங்கப்படுகிறது.
திருப்பூர் பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில், தமிழகத்தில், ‘டாஸ்மாக்’ ஊழியர்கள் மீதான தாக்குவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து, டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். ‘டாஸ்மாக்’ மதுக்கடைகளில் ஊழியர் பற்றாக்குறையை போக்க ஊழியர்களை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் முதலிபாளையத்தில் உள்ள நிப்டி ஆடை வடிவமைப்பு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருபவர் ஸ்ரீ கமலி. இவர் 157 நாட்களாக களிமண் மற்றும் அட்டைகளை கொண்டு, பல கலரில் பெயிண்ட் அடித்து நிஜமாக காணப்படும் ராயல் என் பீல்டு புல்லட் பைக்கை உருவாக்கி நேற்று(மே 20) முழுமைபடுத்தி உள்ளார். இவரை கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிருஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாநகர், மற்றும் மாவட்ட அளவில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் தற்போது நடக்கும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் தர்ணிகா. சிறு வயது முதலே யோகா, சிலம்பத்தில் ஆர்வமிக்க இவர் முறையாக பயின்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ளார். இந்த நிலையில் தற்போது தாய்லாந்தில் நடந்த பசிபிக்-ஆசியன் யோகா போட்டியில் கலந்து கொண்டு 3வது பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். இவருக்கு பெற்றோர், பயிற்சியாளர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.