India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருப்பூர் மாவட்டத்தில் 281 தனியார் சுயநிதி பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் இப்பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இதில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்தின் 8 தாலுகாவில் மொத்தம் 4120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட தனியார் பள்ளி கல்வி அதிகாரி ஆனந்தி தெரிவித்தார்.
அரசு கலை கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லுாரி கல்வி இயக்ககம் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள, 164 அரசு கலைக் கல்லூரிகளில் உள்ள இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு மே, 5ம் தேதி துவங்கியது. 2.50 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், காலக்கெடு இன்று (மே 24) வரை நீட்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று வரையிலான 24 மணி நேரத்தில், சராசரியாக 17.50 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச அளவாக, அவிநாசியில், 103 மிமீக்கு கனமழை பெய்துள்ளது. பல்லடம் தாலுகா அலுவலக சுற்றுப் பகுதிகளில் 57 மிமீ மழையும், திருப்பூர் – அவிநாசி ரோட்டிலுள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் 34 மிமீ மழை பதிவானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி ஆற்றின் துணை ஆறான சிலந்தி ஆற்றில் வட்டவடாவில் கேரளா அரசு தற்போது தடுப்பணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அமராவதி அணைக்கு நீர்வரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. இதனால் அதை தடுத்து நிறுத்த நாளை மறுநாள் (மே 26) காலை 10 மணிக்கு சின்னாறு சோதனைச்சாவடியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.
கோவை உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக திருப்பூரில் உள்ள நொய்யல் ஆற்றில் வழக்கமாகச் செல்லும் தண்ணீரைவிட அதிக அளவு செல்கிறது. இந்நிலையில் நொய்யல் ஆற்றில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் அரிசி கடைவீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவில் தேர் திருவிழா இன்று நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் ரதம் வரும் வீதிகளில் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை இன்று மாநகராட்சி ஆணையாளர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே லிங்கம்மநாயக்கனூர் புதூருக்கு விடுமுறைக்கு கெங்கம்பாளையத்தைச் சேர்ந்த வினோத் என்ற தொழிற்பயிற்சி கல்லூரி மாணவன் வந்திருந்தார். இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள குட்டைக்கு குளிக்கச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக வினோத் பரிதாபமாக குட்டைக்குள் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் இந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் 608 மாணவ மாணவிகளும், பிளஸ் ஒன் தேர்வில் 1247 மாணவ மாணவிகளும், எஸ்எஸ்எல்சி தேர்வில் 231 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல் எட்டாம் தேதி வரையிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அருகே பூலுவபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து 2 மாணவிகளும் பிளஸ் ஒன் படிக்க அருகில் உள்ள கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சேர்வதற்காக சென்றனர். அப்போது சேர்க்கை கட்டணமாக தலா 3350 செலுத்த வேண்டும் என கூறினர். இதனால் மாணவிகளின் பெற்றோர்கள் கல்வித்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய அரசு ஆண்டுதோறும் ஒருவருக்கு நிலம் நீர் மற்றும் ஆகாயத்தில் சாகச விளையாட்டுகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் டென்சிங் நாற்கே தேசிய சாகச விருது வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டுக்கான இந்த விருதுபெற விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் நேற்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.